மேலும் அறிய

Thiruvarur : பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி..! வாட்டர்கேன்களில் பெட்ரோல், டீசல் விற்கக்கூடாது - காவல்துறை எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பா.ஜ.க. அலுவலகங்கள் என 67 இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் டீசல் வழங்கக் கூடாது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மற்றும் அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் பொது இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் என பல வன்முறை சம்பவங்கள் மர்ம நபர்களால் நடைபெற்ற வருகின்றன. இதனால் காவல்துறையினர் செய்வதரியாது திகைத்து வருகின்றனர். குறிப்பாக, கோவை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் இல்லம், அலுவலகம், இந்து முன்னணியினர் அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று இருப்பது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வாகன சோதனை, பா.ஜ.க. பிரமுகர்களின் அலுவலகங்களில் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Thiruvarur : பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி..! வாட்டர்கேன்களில் பெட்ரோல், டீசல் விற்கக்கூடாது - காவல்துறை எச்சரிக்கை

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் பள்ளிவாசல்கள் பாஜக அலுவலகங்கள் என 67 இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று 29 ரோந்து வாகனங்கள் மூலமாகவும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், திருவாரூர் மாவட்டம் கோவில்பட்டி கொள்ளுமாங்குடி கானூர் முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல் பங்குகளில் வாட்டர் பாட்டில்களில் யாரேனும் பெட்ரோல் மற்றும் டீசல் கேட்டால் கொடுக்கக் கூடாது என மாவட்ட காவல் துறையினர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். அதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Thiruvarur : பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி..! வாட்டர்கேன்களில் பெட்ரோல், டீசல் விற்கக்கூடாது - காவல்துறை எச்சரிக்கை

மேலும் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் அரசு பேருந்து அதேபோன்று திருவாரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அரசு பேருந்துகளில் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தேடி வரும் நிலையில் தற்பொழுது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழக முழுவதும் அதிகளவில் நடைபெற்று வருகின்ற நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"தூய்மை தஞ்சை" எனும் உன்னத சுகாதார இயக்கம்... தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி தொடக்கி வைத்தார்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
Embed widget