மேலும் அறிய

பனை வாரம் கொண்டாட வேண்டும் - பனை மர ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் பனைபொருட்கள் சேர்க்கப்பட வேண்டும் தமிழக அரசின் சார்பில் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியில்  பனை உணவுப்பொருட்களை சேர்க்க வேண்டும்.

தமிழக அரசின் மரமான பனை மரத்தை காக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத மத்தியில் பனை வாரம் கொண்டாட வேண்டும் பனை மர ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.

தமிழக அரசின் மரமான பனை மரத்தை காக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத மத்தியில் பனை வாரம் கொண்டாட வேண்டும் என பனை மரத் தொழிலாளர் நல வாரியத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

பனை மரத்தை கற்பகத்தரு என அழைப்பர். இயற்கையாக வளரக்கூடிய தாவர வகையைச் சேர்ந்த பனை மரம் மழை நீரை அதிகளவில் பூமிக்குள் கொண்டு செல்லக்கூடிய தன்மையை பெற்றுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயர பனை மரம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு கிணற்றைச்சுற்றி பத்து பனை மரங்கள் இருந்தால் போதும். அக்கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். அதே பனை மரம் கழுத்து முறிந்து சாகிறது என்றால் அப்பகுதி பாலை நிலமாக மாறுகிறது என்று பொருள். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை ஓலை, நுங்கு, பனம் பழம், பதநீர், கள், மட்டையின் காம்பிலிருந்து கிடைக்கும் அகனி, முற்றிய பனை மரத்தின் சப்பைகள் என 800 க்கும் மேற்பட்ட பொருட்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். பனை ஓலை பொருட்களில் செய்யப்படுகின்ற தோடு, வளையல், செயின் போன்றவைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.


பனை வாரம் கொண்டாட வேண்டும்  - பனை மர ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

இப்பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது. ஜீனிக்கு மாற்றாக பனை வெல்லத்தை உபயோகிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். இவ்வளவு பயன்பாடுகள் கொண்ட பனை மரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருவது பனை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பனை மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பனை மரங்கள் காக்கப்பட்டுள்ளது. பனை பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத மத்தியில் பனை நாள் அல்லது பனை வாரம் அரசின் சார்பில் கொண்டாடப்பட வேண்டும். இக்கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடப்பட வேண்டும்.


பனை வாரம் கொண்டாட வேண்டும்  - பனை மர ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட வேண்டும். பனை வெல்லம் அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழக அரசின் ஆவின் பாலகத்தில் தயாரிக்கப்படும் இனிப்பு பண்டங்களை பனை வெல்லத்தில் செய்து வழங்க முன்வர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் பனை பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். தமிழக அரசின் சார்பில் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியில்  பனை உணவுப்பொருட்களை சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள சுய உதவிக்குழுப் பெண்களுக்கு பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் தயாரிக்கப்படும் நுங்கு, பனம் பழம், பதநீர், கள், மட்டையின் காம்பிலிருந்து கிடைக்கும் அகனி பனை ஓலை பொருட்களை அரசே கொள்முதல் செய்திட வேண்டும். இவ்வாறு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget