மேலும் அறிய

மனித கழிவுகளை மனிதர்களால் அகற்றும் அவலம்; மீண்டும் மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு

மனிதர்களைக் கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மனிதர்களைக் கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் பேரணியை  மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகம் எவ்வளவு  வேகமாய் முன்னேறி, விஞ்ஞான வளர்ச்சியை அடைந்தாலும் மனித கழிவுகளை சக மனிதனே அகற்றும் கொடுமை  மட்டும் இன்றளவும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.  இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏராளமான நோய்களும்,  பணியின் போது இறப்புகளும் தொடர்ந்து நடந்தேறிய வண்ணமே உள்ளன.

இதனை  தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சட்டமும் நடைமுறையில் உள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டத்தின் பிரிவு 9-ன் படி மனிதர்களை கொண்டு கழிவுநீரகற்றினால், முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மனித கழிவுகளை மனிதர்களால் அகற்றும் அவலம்; மீண்டும் மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு

இதேபோன்று 2 வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இது இரண்டு தண்டனையும் சேர்த்து வழங்கப்படும். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், உள்ளிட்ட இடங்களில் உரிய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Honda CB300F: ஹோண்டா பைக் வாங்க இதுதான் சரியான நேரம்.. ரூ.56,000 விலை குறைப்பு, CB300F மாடல் அறிமுகம்


மனித கழிவுகளை மனிதர்களால் அகற்றும் அவலம்; மீண்டும் மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி சார்பாக மனிதர்களை கொண்டு கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை நகராட்சி சார்பாக நடத்தப்பட்டது. தியாகி நாராயணசாமி நகராட்சி மேல் நிலை பள்ளியில் துவங்கிய பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் பாலு, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

Kim Jong Un Train: 4,500 கி.மீ., தூரம்..ஆனாலும், வடகொரிய அதிபர் ரயிலில் பயணிப்பது ஏன்? ராக்கெட் லாஞ்சர் - பார்பிக்யூ வரை..


மனித கழிவுகளை மனிதர்களால் அகற்றும் அவலம்; மீண்டும் மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு

பேரணியில், கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி  14420 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவு நீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும், மனிதர்களைக் கொண்டு மனிதக்கழிவுகள் அகற்றப்பட்டால் ஒராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த  மாணவர்களின் பேரணி பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக ஆட்சியர்  உறுதிமொழியை வாசிக்க  அதனைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Senthil Balaji: மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறையினர்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
Embed widget