மேலும் அறிய

Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!

நாங்குநேரி சம்பவத்தில் உயிரிழந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது சாதிய மோதல் என முதலில் கருதப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குழப்பம் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டை அலற விட்ட சம்பவம்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இதனை ஒரு அஸ்திவாரமாக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அலற விடும் அளவுக்கு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சம்பவம் ஒன்று மார்ச் 2ம் தேதி இரவு நடைபெற்றது. 

அங்கு களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடை ஒன்றில் மார்ச் 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். அவர்களை துரத்திய கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளது. மேலும் எதிரில் எதேச்சையாக வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. 

இந்த சம்பவத்தில் வட மாநில தொழிலாளி ஒருவரும், உள்ளூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரும் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீசார் குவிப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது சாதிய மோதல் என முதலில் கருதப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணைக்கு வந்த போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட போலீசார் நாங்குநேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றத்தை தணிக்க பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். 

இதனிடையே தங்கள் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. 

7 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையில் கண்ணன், அந்தோணி மைக்கேல் ராஜ், உச்சிமாகாலி, வசந்தகுமார், சுப்பையா என்ற சுபாஷ், கல்யாணி, இசக்கிராஜா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கல்யாணி, சுபாஷ் இருவரும் நாங்குநேரி மாணவர் சின்னதுரையை வீடு புகுந்து சாதிய ரீதியிலான தாக்குதல் நடத்தியதில் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. 

மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நவீன் வாழ்க என கோஷமிட்டதாக சொல்லப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த நவீன் வழக்கு ஒன்றின் காரணமாக ஊரை விட்டு வெளியே வாழ்ந்து வருகிறார். ஆனால் தான் இப்படி செய்யவில்லை என அவர் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தார். இதனிடையே நவீனுக்கு எதிராக செயல்படும் நபர் தான் மதுரை சிறையில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget