மேலும் அறிய

மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். ம

தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெருமளவில் கையூட்டு பெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் அது தொடர்பாக மாநில முழுவதும் பல புகார்கள் எழுவதும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததும் என நடவடிக்கை எடுத்தாலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் இன்றளவும் குறைந்தபாடில்லை.


மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் முத்தூர், அகர ஆதனூரை சேர்ந்தவர் 35 வயதான விவசாயி மதன் மோகன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களுக்கும் முறைகேடாக வாகன பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி தனது தாய் உமா மகேஸ்வரியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 


மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

அதனைத் தொடர்ந்தும் அவர் புகார் மனுவின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மதன்மோகன்   இன்று  மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து  அலுவலகம் முன்பு விஷம் அருந்தி,  அலுவலக வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது இந்த முடிவிற்கு மயிலாடுதுறை முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் சண்முகவேல் மற்றும் தற்போதைய போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகிய இருவருமே காரணம் என குற்றச்சாட்டி கோஷங்கள் எழுப்பினார். 


மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

தொடர்ந்து அரை மயக்க நிலைக்குச் சென்ற மதன்மோகனை அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு

மேலும் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு அங்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், இந்த இரு அலுவலகங்களிலும் லஞ்ச, லாவண்யம் கரைபுரண்டு ஓடுவதாகவும், போக்குவரத்து வாகனம் தொடர்பாக எந்த ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் போக்குவரத்து அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள புரோக்கர்களை நாடவேண்டிய சூழல் நிலவுவதாகவும், நேரடியாக விண்ணப்பம் செய்து இங்கு பணிகளை மேற்கொண்டார் அவற்றை புறக்கணித்து அலைக்கழிப்பு செய்யப்பட்டு பணியினை செய்து தர வட்டார போக்குவரத்து அலுவலர் மறுப்பதாகவும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget