மேலும் அறிய

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த 2 பேரை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. திருமானூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் வேல்முருகன் (19). டூரிஸ்ட் வேன் டிரைவர். இவர் பாபநாசம் பகுதிக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவது வழக்கம்.

அப்போது 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும், வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி வழக்கம் போல் பக்தர்களை வேனில் வேல்முருகன் அழைத்து வந்துள்ளார். அப்போது அவருடன் அவரது நண்பர்களான பாப்பாநாட்டை சேர்ந்த வீரா, நாச்சியார்கோயில் அருகே திருச்சேறை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் கண்ணன் (57) ஆகியோரும் வந்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை சந்தித்த வேல்முருகன் வேனில் செல்லலாம் என்று அழைத்துள்ளார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேனை நிறுத்தி விட்டு வீரா, கண்ணன் ஆகியோர் உதவியுடன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வேல்முருகன், மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வீரா, கண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது

தஞ்சாவூர் அருகே தனது 10 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக 2வது கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல் கணவரை விட்டு அந்த பெண் பிரிந்து விட்டார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கரைமீண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வெற்றிசெல்வன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தனது தாயுடன் அந்த 10 வயது சிறுமி படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி மறுநாள் காலை தனது தாயிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கனிகா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வெற்றிச்செல்வனை போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Embed widget