மேலும் அறிய

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த 2 பேரை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. திருமானூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் வேல்முருகன் (19). டூரிஸ்ட் வேன் டிரைவர். இவர் பாபநாசம் பகுதிக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவது வழக்கம்.

அப்போது 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும், வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி வழக்கம் போல் பக்தர்களை வேனில் வேல்முருகன் அழைத்து வந்துள்ளார். அப்போது அவருடன் அவரது நண்பர்களான பாப்பாநாட்டை சேர்ந்த வீரா, நாச்சியார்கோயில் அருகே திருச்சேறை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் கண்ணன் (57) ஆகியோரும் வந்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை சந்தித்த வேல்முருகன் வேனில் செல்லலாம் என்று அழைத்துள்ளார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேனை நிறுத்தி விட்டு வீரா, கண்ணன் ஆகியோர் உதவியுடன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வேல்முருகன், மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வீரா, கண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது

தஞ்சாவூர் அருகே தனது 10 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக 2வது கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல் கணவரை விட்டு அந்த பெண் பிரிந்து விட்டார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கரைமீண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வெற்றிசெல்வன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தனது தாயுடன் அந்த 10 வயது சிறுமி படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி மறுநாள் காலை தனது தாயிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கனிகா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வெற்றிச்செல்வனை போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget