மேலும் அறிய

தூய்மை பணியில் ஈடுபட மறுக்கும் பணியாளர்கள் - மயிலாடுதுறையில் சிக்கல்

மயிலாடுதுறையில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து குப்பை வண்டிகளை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து குப்பை சேகரிக்கும் வண்டிகளை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள  36 வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 80 நபர்களை ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது.


தூய்மை பணியில் ஈடுபட மறுக்கும் பணியாளர்கள் - மயிலாடுதுறையில் சிக்கல்

இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் 124 தூய்மை பணியாளர்கள், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் நேற்று  புதிதாக பணியமர்த்தப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் 19 பேர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். 

No Tomato Dish: தக்காளி விலை ஒரு பிரச்சனையா? தக்காளியே இல்லாத சமையல் ரெசிபீஸ் உங்களுக்காக இதோ..


தூய்மை பணியில் ஈடுபட மறுக்கும் பணியாளர்கள் - மயிலாடுதுறையில் சிக்கல்

இதனை அறிந்து  அதிர்ச்சியடைந்த  தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தும்,  நகராட்சி அலுவலகத்தை முற்றகையிட்டும் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக காவல்துறை அளித்த உத்தரவாதத்தின் பேரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

Aadi Perukku 2023: காவிரி ஆற்றங்கரையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா.. ஏராளமான புதுமண தம்பதியினர் பங்கேற்பு


தூய்மை பணியில் ஈடுபட மறுக்கும் பணியாளர்கள் - மயிலாடுதுறையில் சிக்கல்

ஆனால்  பேச்சு வார்த்தை நடத்தமால் இன்று வடமாநில தொழிலாளர்கள் மூலம் தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம்’ முயற்சித்துள்ளது. இதனை கண்ட  ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகர பூங்காவில் குப்பை அல்ல செல்லும் வாகனங்களை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சியின் நிரந்தர பணியாளர்கள் வேலை செய்தால் வாகனத்தை அனுப்புவோம் எனவும், வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பினால் வாகனத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறினர்.

Gnanawabi Masjid: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி..


தூய்மை பணியில் ஈடுபட மறுக்கும் பணியாளர்கள் - மயிலாடுதுறையில் சிக்கல்

தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தமாட்டோம் என்று  நகராட்சி துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் பேரில் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தனர். தொடர்ந்து  இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாததால்  நகராட்சியில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி துர்நாற்றம் வீசும் முன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget