மேலும் அறிய

Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் பேட்டியளித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விடுவித்த நீதிமன்றம்

டெல்லியில், ஆம் ஆத்மி அரசின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட மதுபானக் கெள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டடோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவ் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தவறான விசாரணை மேற்கொண்டதாக சிபிஐ-க்கும் சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கதறி அழுத கெஜ்ரிவால்

இந்நிலையில், தீர்ப்புக்குப் பின் பேட்டியளித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மற்றும் தாங்கள் நேர்மையானவர்கள் என்றும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிமன்றம் கூறியிருப்பதாக சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதார். உண்மை வெல்லும் என்று எப்போதுமே தான் கூறி வந்ததாகவும், இந்திய சட்ட அமைப்பின் மீது தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மியை முடிவுக்கு கொண்டுவர மோடியும், அமித் ஷாவும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நீதிமன்றம் கூறியது என்ன.?

இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மதுபான கொள்கையில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கே முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது. ஊகத்தின் அடிப்படையில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும்,  23 பேர் மீதும் குற்றச்சாட்டே பதிய முடியாது எனவும் நீதிபதி ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்.

மேலும், தவறான விசாரணையை மேற்கொண்டதாக சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றி  சிபிஐ வழக்கு தொடுத்ததாகவும், சிபிஐ-யின் இந்த செயல்பாடு அனுமதிக்கப்பட்டால், அரசியலமைப்பு தத்துவங்களின் விதிமீறலுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணையில் உள்ள பலவீனங்களை நிரப்புவதற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றி, வழக்கு நடத்துவது தவறு என்றும், கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கையில் கிரிமினல் நோக்கமோ, சதியோ இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு ஊழியரை ஏ1-ஆக மாற்றிய சிபிஐ அதிகாரிகள் மீது, துறை விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றும்  டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
ஈரான் தலைவர் கமேனி மரணம்: இந்தியா முதல்முறையாக இரங்கல்! ராகுல் கேள்விக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
ஈரான் தலைவர் கமேனி மரணம்: இந்தியா முதல்முறையாக இரங்கல்! ராகுல் கேள்விக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
ஹோலி கொண்டாட்டம்.. பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!
ஹோலி கொண்டாட்டம்.. பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!
Nitish Kumar: முதல்வர் பதவி வேண்டாம்.. நிதிஷ்குமார் ராஜினாமா.. அடுத்த பிளான் இதுதான்!
Nitish Kumar: முதல்வர் பதவி வேண்டாம்.. நிதிஷ்குமார் ராஜினாமா.. அடுத்த பிளான் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Embed widget