மேலும் அறிய

250 கிராம் விதை நெல் மூலம் 4 டன் மகசூல் செய்யும் மயிலாடுதுறை விவசாயி!

ஓர் ஏக்கர் நிலத்தில் 250 கிராம் விதை நெல்லை பயன்படுத்தி 4 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி.ஒருவர்.

ஓரு ஏக்கர் நிலப்பரப்பில் 250 கிராம் விதை நெல்லில் குறுவை சாகுபடி பணிகள் செய்து 18 ஆண்டுகளாக விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஒருவர். 


250 கிராம் விதை நெல் மூலம் 4 டன் மகசூல் செய்யும் மயிலாடுதுறை விவசாயி!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்துவருகிறார். 
ஒரு ஏக்கர் குறுவை நடவு செய்வதற்காக 250 கிராம் நெல்லை விதை நேர்த்தி செய்யும் இவர், விதையில் பழுது இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார். இவற்றை விதைப்பதற்கு 3 சென்ட் நிலத்தை  கவனமாகத் தயார் செய்து.  தன் கையாலேயே கால் கிலோ விதை நெல்லை தூவுகிறார். 20 முதல் 25 நாட்கள் வரை நாற்று வளர்ந்து பச்சைமாறுகிறது. பின்னர் 5 பெண்கூலித் தொழிலாளர்களைக் கொண்டு நடவு செய்கிறார். 50 செ.மீ இடைவெளி மற்றும் 50 செ.மீ வரிசையில் நடவு நடப்படுகிறது. விவசாயதுறையினரோ ஒருசதுரமீட்டருக்கு 60 நாற்றுக்கள் வரை நடுவதற்கு பரிந்துரை செய்கின்றனர், ஆனால், ஒற்றை நாற்றில் ஒரு சதுரமீட்டருக்கு 4 நாற்று என நட்டு நடவையே முடித்துவிடுகிறார் ஆலங்குடி பெருமாள். 


250 கிராம் விதை நெல் மூலம் 4 டன் மகசூல் செய்யும் மயிலாடுதுறை விவசாயி!

தற்பொழுது நாற்றங்காலில் நெல் தூவும் பணியை அவரே மேற்கொண்டார். முன்னோடி விவசாயி பெருமாள் குறுவை விவசாயப்பணிகளை துவங்கும்போது விவசாயப்பணிகளை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக விவசாயிகள் வருவது வழக்கம். தற்பொழுது கொரேனா நோய் தடுப்பு ஊரடங்கு என்பதால் அவர் ஒருவர் மட்டுமே விதைவிடும் பணியை முடித்துள்ளார்.


250 கிராம் விதை நெல் மூலம் 4 டன் மகசூல் செய்யும் மயிலாடுதுறை விவசாயி!


ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு இவருக்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய்.  மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். மேலும் ஒர் ஏக்கருக்கு 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கிறது, ஆனால் ஆலங்குடி பெருமாளின் விவசாய முறையில் நட்டால் குறைந்தபட்சம் 3 டன் முதல் 4 வரை மகசூல் கிடைக்கிறது என நிரூபித்துக் காண்பித்துள்ளார்.ஆலங்குடி பெருமாள் தனது விவசாய முறையை 2009 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது அவருக்கு அனுப்பி வைத்தார். இதனை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆலங்குடி பெருமாள் கூறுவது உண்மை என்று விவசாய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மேல் நடவடிக்கை எதுவும் இல்லை என்று கூறும் பெருமாள், தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனது விவசாய முறையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து குறைந்த செலவில் அதிக மகசூலை பெற விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும் என்று, முன்னோடி விவசாயி பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தீவனப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கும் : பேராவூரணியில் ஆட்சியர் ரேவதி கூறியது எதற்காக?
தீவனப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கும் : பேராவூரணியில் ஆட்சியர் ரேவதி கூறியது எதற்காக?
கிருஷ்ணர், ராதை வேடத்தில் கலக்கிய பிள்ளையார்பட்டி பள்ளிக் குழந்தைகள்
கிருஷ்ணர், ராதை வேடத்தில் கலக்கிய பிள்ளையார்பட்டி பள்ளிக் குழந்தைகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Highest Range EV Scooters: நாட்டில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? லிஸ்ட், விலை, அம்சங்கள் இதோ
நாட்டில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? லிஸ்ட், விலை, அம்சங்கள் இதோ
Maruti Suzuki New Baleno: கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
Kia Sorento: ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
Embed widget