மேலும் அறிய

மன்னார்குடி : ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சலூன், எலக்ட்ரானிக் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்

மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை செய்ததில் சுமார் 10 கடைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மன்னார்குடியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சலூன் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் என பத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் நாளை ஏழாம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் இந்நிலையில் இந்த முழு ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இந்த நிலையில்  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை முதல்  குறைந்த அளவு தளர்வுகளோடு  ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை பழக்கடைகள் மளிகைக் கடைகள் இறைச்சிக் கடைகள் செயல்படும் எனவும் மேலும் பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் செயல்படாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

மன்னார்குடி : ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சலூன், எலக்ட்ரானிக் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருந்தகம், பால் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிலவற்றை தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முழு ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மன்னார்குடியில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரும் நகராட்சி அதிகாரிகளும்  தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்  அதனையொட்டி  தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி  மன்னார்குடி கடைவீதியில் சில கடைகள் திறக்கப்பட்டு  செயல்பட்டு வந்தன. குறிப்பாக சலூன் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் திறந்திருப்பது கண்டறியப்பட்டது.
 
இதனையடுத்து மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை செய்ததில் சுமார் 10 கடைகளை திறந்து உரிமையாளர்கள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் அபராதமாக வசூலித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மன்னார்குடி : ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சலூன், எலக்ட்ரானிக் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம்
மேலும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அரசின் உத்தரவை மீறி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால், நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
ட்ரோன்கள் பறக்கக் கூடாது... தஞ்சாவூர் கலெக்டர் தடை அறிவிப்பு எதற்காக?
ட்ரோன்கள் பறக்கக் கூடாது... தஞ்சாவூர் கலெக்டர் தடை அறிவிப்பு எதற்காக?
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு உடன் கடன் வழங்குங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு உடன் கடன் வழங்குங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Embed widget