மேலும் அறிய

மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

கொள்ளிடம் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணிகள் மும்முரமாக நடப்பதையொட்டி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், திருச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், போதிய மழையின்மை, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்காத காரணம் என விவசாம்  இரண்டு போகமாக மாறிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், தற்போது ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர். 


மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை நெருங்கியுள்ளது. நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர். 


மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

தற்போது சுமார் 96 அடியாக மேட்டூர் நீர்மட்டம் உள்ள நிலையில், ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தற்போது பிரதான பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையொட்டி  காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

பின்னர் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்படுவதன் மூலம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு எளிதில் தண்ணீர் வந்து சேரும் என்றும், தற்போது பிரதான ஏ பிரிவு பாசன வாய்க்கால்கள் சிறப்பான முறையில் தூர்வாரப்பட்டு வருகிறது. 


மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

இதேபோல் பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், மேகதாது அணை கட்டினால் குடிதண்ணீர் கூட கிடைக்காது என்பதால், அங்கு அணை கட்டக்கூடாது என்றும், கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி அருகே தடுப்பணை கட்டவேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vishal:
"பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்!
Lok Sabha Election 2024: #அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
#அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
Breaking Tamil LIVE: வேங்கைவயல் விவகாரம்: 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
வேங்கைவயல் விவகாரம்: 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Leopard in Thanjavur TN : 15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

MK Stalin : Stalin Attack GST : ”மோடிக்கு பொருளாதாரப் புலி-னு நினைப்பு” ஸ்டாலின் FIERY SPEECHSellur raju  : பேட்மிண்டன் விளையாடி அசத்திய செல்லூர் ராஜூ பிரச்சாரத்தில் கலகலStalin Slams Modi :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vishal:
"பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்!
Lok Sabha Election 2024: #அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
#அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
Breaking Tamil LIVE: வேங்கைவயல் விவகாரம்: 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
வேங்கைவயல் விவகாரம்: 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Leopard in Thanjavur TN : 15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
Income Tax Return: உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் 7 வீரர்கள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் 7 வீரர்கள்!
Latest Gold Silver Rate: புதிய உச்சம்.. ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்.. சவரனுக்கு ரூ.640 உயர்வு!
புதிய உச்சம்.. ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்.. சவரனுக்கு ரூ.640 உயர்வு!
Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?
வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?
Embed widget