மேலும் அறிய

இணையதளம் மூலம் நெல் கொள்முதல் - டெல்டா விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

’’விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய  www.tncsc.tn.gov.in  மற்றும் www.tncsc-edoc.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்த பின்னர் குறுஞ்செய்தி அனுப்பப்படும்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆகும். இந்த நிலையில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்டங்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்மணிகளை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இணையதளம் மூலம் நெல் கொள்முதல் - டெல்டா விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?
 
இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தற்பொழுது அறுவடை முடிந்தவுடன் உடனடியாக நெல் மூட்டைகளை எடுத்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்து பின்னர் யார் முதலில் நெல் மூட்டைகளை கொண்டு வந்தார்களோ, அதனடிப்படையில் கொள்முதல் நிலையத்தில்  விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கொள்முதல் நிலைய அதிகாரியிடம் தங்கள் நிலத்திற்கான சிட்டா அடங்கல் கொடுத்து நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருவது வழக்கம். மேலும் சன்ன ரகம் 40 கிலோ மூட்டை 783.20 ரூபாய்க்கும், பொதுரகம் 40 கிலோ மூட்டை 767.20 ரூபாய்க்கும், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்றவுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அதற்கான தொகை வரவு வைக்கப்படும்.

இணையதளம் மூலம் நெல் கொள்முதல் - டெல்டா விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?
 
லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு: அதே நேரத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூலமாக தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய திட்டம்: இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை இனி விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edoc.in என்ற இணையதளம் வாயிலாக பெயர், ஆதார் எண், கிராமத்தின் பெயர், நிலத்தின் உரிமையாளர் பெயர், சிட்டா அடங்கள் உள்ளிட்டவைகளை பதிவு செய்த பின்னர் நிலத்தின் உரிமையாளரின் தொலைபேசி எண்ணிற்கு அதிகாரிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த குறுஞ்செய்தியில் விவசாயிகள் எந்த கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டும், மற்றும் விற்பனை செய்யும் தேதி ஆகியவை தொலைபேசி எண்ணிற்கு வரும். அந்த தேதியில் நேரடியாக சென்று விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம். இதனால் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

இணையதளம் மூலம் நெல் கொள்முதல் - டெல்டா விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?
 
விவசாயிகள் எதிர்ப்பு: அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை அதிக அளவில் கோவில் நிலங்களும் குத்தகை சாகுபடி எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சிறு குறு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லாத காரணத்தினால் தான் நேரடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாமல் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே தமிழ்நாடு அரசு எப்பொழுதும் போல் உள்ள நடைமுறையை பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திமுக அரசின் இந்த முடிவை அதிமுகவும் எதிர்த்துள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மனோரா கடற்கரையில் கடல்பசு பாதுகாப்பு மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
மனோரா கடற்கரையில் கடல்பசு பாதுகாப்பு மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget