மேலும் அறிய

திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!

நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மழை குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 3 நாட்களுக்கு பிறகு அதாவது வருகிற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் சோழவரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு, அரபிக்கடல் பகுதிகளுக்கும் இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர், பூந்தோட்டம், பேரளம், திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஸ்ரீவாஞ்சியம், அம்மையப்பன், மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன  சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 75 நாட்களான குறுவை நெல் பயிர்களுக்கு, தற்பொழுது தண்ணீர் வைக்க வேண்டிய நிலையில், தற்பொழுது ஒரு சில ஆறுகளை தவிர மற்ற ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!
இந்நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மழை குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. மேலும் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி கலந்து செல்வதால் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக தண்ணீர் தேங்காமல் வடியவைப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு: ரூ.50.88 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வசூல்!
தஞ்சை பெரிய கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு: ரூ.50.88 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வசூல்!
தஞ்சாவூரில் அதிரடி! ஒரே நாளில் 19 வட்டாட்சியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் ஆர்.ரேவதி உத்தரவு!
தஞ்சாவூரில் அதிரடி! ஒரே நாளில் 19 வட்டாட்சியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் ஆர்.ரேவதி உத்தரவு!
இரக்கமே இல்லாமல் மோதிவிட்டு ஓட்டம்! உயிரிழந்த முதியவர்... தஞ்சையில் பதற்றத்தை ஏற்படுத்திய சாலை மறியல்!
இரக்கமே இல்லாமல் மோதிவிட்டு ஓட்டம்! உயிரிழந்த முதியவர்... தஞ்சையில் பதற்றத்தை ஏற்படுத்திய சாலை மறியல்!
நொடிக் பொழுதில் தப்பிய 10 உயிர்கள்! பேராவூரணி அருகே 2 கயிறு ஆலைகளில் அக்னித் தாண்டவம்!
நொடிக் பொழுதில் தப்பிய 10 உயிர்கள்! பேராவூரணி அருகே 2 கயிறு ஆலைகளில் அக்னித் தாண்டவம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
”தற்குறி, பொறுக்கி, மக்கள் காரி துப்புவார்கள்”.! விஜய்யை தர லோக்கலாக இறங்கி அடித்த திமுக.!
”தற்குறி, பொறுக்கி, மக்கள் காரி துப்புவார்கள்”.! விஜய்யை தர லோக்கலாக இறங்கி அடித்த திமுக.!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்: ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எப்போது? அன்புமணி கேள்வி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்: ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எப்போது? அன்புமணி கேள்வி
Zelensky: மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.! ட்ரோனுடன் மோத இருந்த விமானம்.! நடந்தது என்ன.?
மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.! ட்ரோனுடன் மோத இருந்த விமானம்.! நடந்தது என்ன.?
Sardar 2 Review: உளவாளி கார்த்தி சர்தார்-2வை காப்பாற்றினாரா? SJ சூர்யா மிரட்டினாரா? விமர்சனம் இதோ..!
உளவாளி கார்த்தி சர்தார்-2வை காப்பாற்றினாரா? SJ சூர்யா மிரட்டினாரா? விமர்சனம் இதோ..!
Maruti Baleno: 5 வேரியண்ட்களில் பலேனோ - ஹேட்ச்பேக்கின் முழு விலைப்பட்டியலை வெளியிட்ட மாருதி சுசூகி
5 வேரியண்ட்களில் பலேனோ - ஹேட்ச்பேக்கின் முழு விலைப்பட்டியலை வெளியிட்ட மாருதி சுசூகி
Embed widget