மேலும் அறிய

திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!

நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மழை குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 3 நாட்களுக்கு பிறகு அதாவது வருகிற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் சோழவரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு, அரபிக்கடல் பகுதிகளுக்கும் இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர், பூந்தோட்டம், பேரளம், திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஸ்ரீவாஞ்சியம், அம்மையப்பன், மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன  சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 75 நாட்களான குறுவை நெல் பயிர்களுக்கு, தற்பொழுது தண்ணீர் வைக்க வேண்டிய நிலையில், தற்பொழுது ஒரு சில ஆறுகளை தவிர மற்ற ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!
இந்நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மழை குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. மேலும் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி கலந்து செல்வதால் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக தண்ணீர் தேங்காமல் வடியவைப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Embed widget