மேலும் அறிய

மின் கம்பியாள் உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க என்ன செய்யணும்? முழு விபரம் உள்ளே!!!

தொழிற்பிரிவில் தகுதிப் பெற நடத்தப்படும் இரண்டு முக்கிய தேர்வுகளுக்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இத்தேர்வுகளுக்கு உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தஞ்சாவூர்: தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் மின் கம்பியாள் உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.

தொழிற்பிரிவில் தகுதிப் பெற நடத்தப்படும் இரண்டு முக்கிய தேர்வுகளுக்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இத்தேர்வுகளுக்கு உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தேசிய தொழிற் சான்றிதழ் பெற தனித்தேர்வர்களாக எழுத மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு ஆகியவற்றிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026-ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT மூலம் அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 4 வகையான தொழிற்பிரிவு பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

முதல் வகை : ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐ-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருடம் பனி அனுபவம் பெற்றவர்கள் அப்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் வகை : திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் (COE NTC) பெற்ற பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருந்தால், அப்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை : ஆகஸ்ட் 2018 வரை மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் (SCVT) தொழிற்பிரிவு சேர்க்கை பெற்று, ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.

நான்காம் வகை : பிற வகையான விண்ணப்பதாரர்கள். இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.

தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அரசு/ உள்ளாட்சி மன்றத்தில் பதிவு செய்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கும் நபர்கள் தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். முதல் வகை மற்றும் நான்காம் வகை தேர்வர்கள் முதனிலைத் தேர்வுகள் 2 வகையாக நடைபெறும். கருத்தியல் (Theory) தேர்வு வரும் 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறைத் தேர்வு 05.11.1025 என நடைபெறும். கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வு நடைபெறும்.

கருத்தியல் தேர்வு விரிவாக எழுதும் வகையில் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு ஜூலையில் நடைபெறும் அகில இந்திய தொழிற் தேர்விற்கு தனித்தேர்வர்களாக எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டெல்லி DGT மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) அனுப்பப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 https://www.karuvoolam.tn.gov.in/ இணைப்பில் வழியாகவோ அல்லது எஸ்பிஐ வங்கி கருவூலக் கிளையின் வழியாகவோ செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 37 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் இதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த விவரத்துடன், கல்வித்தகுதி மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பி, தொழிற்பயிற்சி நிலையங்களில் முதல்வர்களிடம் நேரடியாக 08.10.2025 தேதிக்குள் வழங்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
ஸ்வப்ன சாஸ்திர ரகசியங்கள்! என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? முழுமையான விளக்கம்!!!
ஸ்வப்ன சாஸ்திர ரகசியங்கள்! என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? முழுமையான விளக்கம்!!!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
Embed widget