மேலும் அறிய

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு காரணம் என்ன?

சீர்காழி அருகே மீன் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான தனியார் இரால்,மீன் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழில் சாலையில் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்து, அவற்றை பாய்லரில்  வேகவைத்து அரைத்து நவீன முறையில் மீன் எண்ணெய் மற்றும் தீவனங்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு காரணம் என்ன?

மேலும் இந்த தொழிற்சாலையில் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று  திடீரென தொழிற்சாலையில் அதிக அழுத்தம் காரணமாக பயங்கர சத்தத்துடன்  பாய்லர் வெடித்ததுள்ளது. பாய்லர் வெடித்த சத்தத்தை கேட்டு அங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை அமைந்துள்ள தொடுவாய் கிராமத்தில் இருந்து வந்து பார்த்ததில் பாய்லர் அருகில் பணியில் ஈடுப்பட்டிருந்த  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா மற்றும் பல்ஜித்ஓரான் ஆகிய இருவரும் படுகாயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

 

Multi Tasking Staff Recuritment: இந்திய மழைக்காடுகள் நிறுவனத்தில் வேலை..! ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு காரணம் என்ன?

மேலும் படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 53 வயதான ரகுபதி மற்றும் பந்தநல்லூரை சேர்ந்த 45 வயதான மாரிதாஸ், திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த 29 வயதான ஜாவித் ஆகிய 3 பேரையும் சக ஊழியர்கள் கிராம மக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரகுபதி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு காரணம் என்ன?

மேலும் இதுகுறித்து அப்பகுதி கிராம வாசிகள் கூறுகையில் “இந்த தொழிற்சாலை ஆரம்பித்த நாள் முதல் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இங்குள்ள பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து இந்த தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தின் அலட்சிய போக்கே தற்போது இரண்டு ஊழியர்கள் உயிரினத்திற்கு முழு காரணம். மேலும் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் தொழிற்சாலை பாதுகாப்பினை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து செயல்பட அனுமதி வழங்கவேண்டும். மேலும் இந்த விபத்துக்குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

EPS Press Meet: கள்ள ஓட்டுப் போட முயற்சி..! ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட இபிஎஸ்..!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
"தமிழகத்தில் நடப்பது என்ன ஆட்சி?" - அனல் பறக்கும் அரசியல் விமர்சனத்தை முன்வைத்த பாஜக கருப்பு முருகானந்தம்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
Arunraj Vs Udhayanidhi: “சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
“சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
E Scooters Under Rs.50,000: ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் ஓட்டலாம்.! ரூ.50,000-க்கும் குறைவான பட்ஜெட் EV ஸ்கூட்டர்கள்; லிஸ்ட்
ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் ஓட்டலாம்.! ரூ.50,000-க்கும் குறைவான பட்ஜெட் EV ஸ்கூட்டர்கள்; லிஸ்ட்
Embed widget