மேலும் அறிய

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அவசரகால சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்து காண்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர: உலக அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து பி.எல்.எஸ். என்ற அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

சிறப்பாக செயல்படுவதற்கு பாராட்டு

ஆண்டுதோறும் மே 27ம் தேதி உலக அவசர சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி நடந்த இதய உயிர்ப்பு பயிற்சி முகாமை  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.பாலாஜி நாதன்  துவக்கி வைத்து பேசுகையில், தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்ட நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு அவசர சிகிச்சை துறையை  பாராட்டினார்.


தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி

அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி

தொடர்ந்து மனித பொம்மைகளை வைத்து பி.எல்.எஸ். என்ற அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி குறித்து பத்திரிகையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அவசர சிகிச்சையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் 108 அவசர சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அவசரகால சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவசர சிகிச்சை பிரிவு துறை பொறுப்பு தலைவர் டாக்டர் வினோத், உள்ளுறை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ. செல்வம், துணை உள்ளுறை மருத்துவ அதிகாரிகள் டாக்டர் முகமது இத்ரீஸ்,  டாக்டர் முத்து மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் நிருபர்களிடம் கூறியதாவது: நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் காயம் பட்டு வரும் நோயாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் அவசர மற்றும் தீவிர சிகிச்சைகள் காப்பீட்டின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களின் அரசு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. இத் திட்டத்தின் கீழ்வரும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் காப்பீட்டின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

5690 பயனாளர்களுக்கு ரூ.5.10 கோடி காப்பீட்டு பயன்கள்

இத்திட்டத்தில் இதுவரை  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த 2021 ஆம் ஆண்டில் 23 பேரும், 22 ஆம் ஆண்டில் 4154 பேரும், 2023 ஆம் ஆண்டில் 1384 பேரும், நடப்பாண்டு மே மாதம் வரை 608 பேரும் என மொத்தம் 6169 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 5690 பயனாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சத்து 48 ஆயிரத்து 120 ரூபாய் காப்பீட்டு பயன்கள் பெறப்பட்டுள்ளன.

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதலிடம்

இவ்வளவு பெரிய இமாலய தொகையை அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பெற்றுத் தந்த அவசர சிகிச்சை துறை பொறுப்பு தலைவர் டாக்டர் ஏ. வினோத் மற்றும் அவருடன் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள், மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் காப்பீட்டு திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தில் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவசர சிகிச்சை துறையின் சாதனை

இதேபோல் அவசர சிகிச்சை துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 693 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதில் 6407 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். விபத்து தற்கொலை முயற்சி என பல்வேறு வகையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் நடப்பாண்டு மே மாதம் வரை 2921 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 2778 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் நடப்பு நாள் வரை 30 ஆயிரத்து 814 அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அவசர சிகிச்சைகள் 6 மணி நேரங்களில் டாக்டர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் ஏஐடியூசி அதிரடி முடிவு: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு வியூகமா?
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: 8 தொகுதிகளிலும் வெற்றி உறுதி... தஞ்சை மாவட்டம் திமுக கோட்டைதான்
110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
Embed widget