மேலும் அறிய

மேட்டூர் அணை திறப்பு; உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை திறப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம். இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளதாக வேளாண் துறை தகவல்.
 
தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெற்பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சனை, போதிய மழை பெய்யாதது, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் முப்போக சாகுபடி இரண்டு போக சாகுபடி ஆக குறைந்து தற்போது சம்பா சாகுபடி மட்டும் முழுமையான அளவில் நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு; உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
 
இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆழ்துளை மோட்டார் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவார்கள். அதன்படி தற்போது திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி முதற்கட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தங்களது வயல் களை டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் உழவு அடித்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முதற்கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
 
தொடர்ந்து ஆள்துளை பம்பு செட் நீரை பயன்படுத்தி இந்த குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆறுகளில் தண்ணீர் வருவதற்கு இன்னும் பதினைந்து தினங்களே இருப்பதால் மீதமுள்ள விவசாயிகளும் குறுவை சாகுபடி முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் அடுத்தடுத்த பணிகளில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட முடியும் எனவே தண்ணீர் திறப்பதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


மேட்டூர் அணை திறப்பு; உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
 
நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட வேளாண்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget