மேலும் அறிய

திருவாரூரில் தனியார் பள்ளியின் முதல்வர் விஷமருந்தி தற்கொலை.. விசாரணையில் தெரியவந்தது என்ன?

இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என தனது மகள் கூறி வந்ததாகவும் நேற்று பள்ளிக்கு சென்றவுடன் அவர் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுவதாகும் காவல்துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மருதவஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா வயது 36. இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சத்யாவிற்கு திருமணம் நடந்து 13 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யாவிற்கு விவாகரத்து ஆன நிலையில் தனது தந்தையான கணேசன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சத்தியா கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பேரளத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

திருவாரூரில் தனியார் பள்ளியின் முதல்வர் விஷமருந்தி தற்கொலை.. விசாரணையில் தெரியவந்தது என்ன?
இந்தநிலையில் சத்தியா கடந்த இரண்டு தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் நேற்று எப்பொழுதும்போல் பள்ளிக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சத்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்யா விஷமருந்தி இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தபோதிலும் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் சத்யாவின் தந்தை தனது மகள் உயிரிழப்பிற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரளம் காவல் நிலையத்தில் சத்யாவின் தந்தை கணேசன் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவரது தந்தை புகாரில் கூறும்பொழுது இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என தனது மகள் கூறி வந்ததாகவும் மேலும் நேற்று பள்ளிக்கு சென்றவுடன் அவர் உயிரிழந்திருப்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுவதாகவும் காவல்துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார். இதில் தாளாளர் மன உளைச்சல் அளித்ததாக கூறப்படும் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது

திருவாரூரில் தனியார் பள்ளியின் முதல்வர் விஷமருந்தி தற்கொலை.. விசாரணையில் தெரியவந்தது என்ன?
இந்த நிலையில் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சத்யாவிடம் நெருங்கிப் பழகிய சக ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் சத்யா உயிரிழந்ததற்கு முன்னால் கூறிய செய்திகள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சத்யாவிற்கு ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சத்யாவின் 13 வயது மகள் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளியில் பல லட்சம் பணத்தை சத்தியா கையாடல் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறி சத்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பூந்தோட்டம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் கொடுத்த புகாருக்கு வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சத்யாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர் இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரம் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளியின் முதல்வர் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் பேரளம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget