மேலும் அறிய

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Background

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 16,813 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 2,236 பேரும், அதைத் தொடர்ந்து சென்னையில் 1,223 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 358ஆக உள்ளது.

20:15 PM (IST)  •  11 Jun 2021

தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக பதிவாகி உள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து 29 ஆயிரத்து 243 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 378 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18:23 PM (IST)  •  11 Jun 2021

தமிழகத்திற்கு வந்தது 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் இருந்து அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த சில தினங்களாக கூறி வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு இன்று வந்தது.

17:48 PM (IST)  •  11 Jun 2021

மானாமதுரையில் ஊரடங்கு விதிகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை

இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை தங்களது மதக்கடமைகளில் ஒன்றாக கொண்டுள்ளனர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதற்கு அனைத்து மதத்தினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் இன்று ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றாக கூடி தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து, தகவலறிந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை கூறி வெளியேற்றினார்.  

15:50 PM (IST)  •  11 Jun 2021

புதுச்சேரியில் கட்டுக்குள் வரும் கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 429 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.  

14:20 PM (IST)  •  11 Jun 2021

நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பாலசரவணன். குட்டிப்புலி, வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்ப இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

14:17 PM (IST)  •  11 Jun 2021

கோவாச்கின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க அமெரிக்கா மறுப்பு

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (​The Food and Drug Administration) அனுமதி மறுத்துள்ளது. 

இந்தாண்டு, ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் கோவக்சின் தடுபூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியை  மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையர் வழங்கினார்.         

பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இதன், 3ம் கட்ட பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் விவரங்கள் அனைத்தும் இதுநாள்  வரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. 

முன்னதாக,அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

12:54 PM (IST)  •  11 Jun 2021

ஒன்றிய அரசே 100% கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழ்நாடு நிதி அமைச்சர்

தடுப்பூசி கொள்முதலில் 75% ஒன்றிய அரசு மேற்கொள்ளுமென கொள்கையை மாற்றிய போதும் 25% தனியார் மருத்துவமனைக்கு அனுமதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.ஒன்றிய அரசே 100% கொள்முதல் செய்து,விநியோகத்தில் மாநிலம் முழு சுயாட்சி பெறுவதே சிறந்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.   

12:49 PM (IST)  •  11 Jun 2021

Coimbatore Covid-19 Vaccination: கோயம்பத்தூர் மாவட்டம் தடுப்பூசி நிலவரம்


12:52 PM (IST)  •  11 Jun 2021

தனியார் மருத்துவமனை கோவின் இணைகதளத்திலிருந்து தற்காலிகமாக நிக்கப்பட்டுள்ளது

திருப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய விவாகரம். துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டார் திருப்பூர் துணை இயக்குனர்.    

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி மருந்தை தனியார் செவிலியர்கள் மூலமாக தனியார் ஆடை நிறுவன ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்ததை தொடர்ந்து, தவறுதலாக தடுப்பூசி வழங்கிய மருந்தாளுநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. 

மேலும், கண்காணிக்க வேண் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்டகப்பட்டுள்ளது.  சமந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை கோவின் இணைகதளத்திலிருந்து (Co-WIN portat) தற்காலிகமாக நிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

12:04 PM (IST)  •  11 Jun 2021

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று நிலவரம்:

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று நிலவரம்:

குணமடைந்தோர் எண்ணிக்கை  -94.93% 
 சிகிச்சை பெற்றுவருபோர் எண்ணிக்கை    -3.83% 
உயிரிழந்தோர் எண்ணிக்கை  -1.24%

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Sajeevan Sajana: கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
Actor Kishore: ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
Breaking Tamil LIVE: நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mansoor Alikhan Hospitalized:  மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கைDayanidhi Maran vs EPS  ”EPS மீது அவதூறு வழக்கு! மன்னிப்பு கேட்கவே இல்ல” கொந்தளித்த தயாநிதி மாறன்Namakkal election 2024  : 7 கி.மீ தூரம்... EVM-ஐ தலையில் சுமந்த அதிகாரிகள்! காரணம் என்ன?Satyabrata sahoo : ’’தேர்தல் விதிகளை மீறினால்..’’ சத்யபிரதா சாகு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Sajeevan Sajana: கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
Actor Kishore: ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
Breaking Tamil LIVE: நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
Devon Conway Ruled Out: காயம் காரணமாக விலகிய கான்வே.. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரை இணைத்துகொண்ட சிஎஸ்கே!
காயம் காரணமாக விலகிய கான்வே.. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரை இணைத்துகொண்ட சிஎஸ்கே!
Tamilnadu Election Voting : நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..
நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..
Google Layoff: இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் - 28 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் - 28 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்
CM MK Stalin:
"வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரை!
Embed widget