மேலும் அறிய

Diwali : மீண்டும் படையெடுக்கும் மக்கள்..! கடும் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கும் சென்னை..!

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வந்ததால், சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றனர்.

சென்னையில் இருந்து மட்டும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் அரசுப் பேருந்துகளில் 3 நாட்களில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 541 பேர் சொந்த ஊர் சென்றனர். இவர்கள் தவிர தனியார் பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சென்றனர்.


Diwali : மீண்டும் படையெடுக்கும் மக்கள்..! கடும் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கும் சென்னை..!

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் அரசு விடுமுறை அளித்ததால் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் திரும்பி வருகின்றனர். இதனால், சென்னை நகரத்தின் நுழைவுப் பகுதியான பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் இருந்து வழக்கமாக சென்னைக்கு பணிக்கு வருபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களின் நெரிசல் அதிகரித்ததையடுத்து, காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளியன்றைய நிலவரப்படி சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்காக சுமார் 10 ஆயிரத்து 325 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது.


Diwali : மீண்டும் படையெடுக்கும் மக்கள்..! கடும் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கும் சென்னை..!

முன்னதாக, தீபாவளி பண்டிகைக்காக  தமிழ்நாடு முழுவதும் வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக மொத்தம் 16 ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இவற்றில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று முதல் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் வழக்கத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget