மேலும் அறிய

Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு

Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Journalists Pension: பீகாரில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இனி கூடுதலாக 15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000

பீகாரில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை 15 ஆயிரமாக உயர்த்தி, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ”பீகார் பத்திரகார் சம்மன் பென்ஷன்” திட்டம் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தகுதியான பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், இதுநாள் வரை வழங்கப்பட்ட ரூ.6,000-த்துடன் கூடுதலாக ரூ.9,000 சேர்த்து இனி ரூ.15 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார் பெருமிதம்:

இதுதொடர்பாக நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் பத்திரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ.6,000 க்கு பதிலாக ரூ.15,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்க துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வுக்குப் பிறகு கண்ணியத்துடன் வாழவும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் வசதிகளை நாங்கள் கவனித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 

கணவரை இழந்தோருக்கு ரூ.10,000

அதே பதிவில், “இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் பத்திரிகையாளர் உயிரிழந்துவிட்டால், அவரது மனைவிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3,000 என்ற உதவித்தொகைக்கு பதிலாக ரூ.10,000 வழங்கவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக” நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 

தேர்தல் சலுகைகள்:

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, நிதிஷ்குமார் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முன்னதாக, வீட்டு பயன்பாட்டிற்கான முதல் 125 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமே வசூலிக்கப்படாது என அண்மையில் அறிவித்தார். இலவச மின்சாரத்தின் நிதி தாக்கத்தைக் குறைக்க, வீட்டின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களுக்கு, மத்திய அரசு உதவியுடன் 50% மானியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டணியை மாற்றி மாற்றி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து வரும் நிதிஷ்குமார் மீது பீகார் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பலவீனமாக்கி, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் உதவியுடன் நிதிஷ்குமார் பல கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து வருகிறாராம். தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜகவிற்கு மத்தியில் ஆட்சியை உறுதி செய்ய நிதிஷ்குமார் ஆதரவு அவசியமாக உள்ளது. அதனால், அவருக்கான உதவிகளை தயங்காமல் பாஜக செய்வதோடு, பட்ஜெட்டின் போது நிதியை வாரி வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget