மேலும் அறிய

Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு

Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Journalists Pension: பீகாரில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இனி கூடுதலாக 15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000

பீகாரில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை 15 ஆயிரமாக உயர்த்தி, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ”பீகார் பத்திரகார் சம்மன் பென்ஷன்” திட்டம் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தகுதியான பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், இதுநாள் வரை வழங்கப்பட்ட ரூ.6,000-த்துடன் கூடுதலாக ரூ.9,000 சேர்த்து இனி ரூ.15 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார் பெருமிதம்:

இதுதொடர்பாக நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் பத்திரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ.6,000 க்கு பதிலாக ரூ.15,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்க துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வுக்குப் பிறகு கண்ணியத்துடன் வாழவும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் வசதிகளை நாங்கள் கவனித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 

கணவரை இழந்தோருக்கு ரூ.10,000

அதே பதிவில், “இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் பத்திரிகையாளர் உயிரிழந்துவிட்டால், அவரது மனைவிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3,000 என்ற உதவித்தொகைக்கு பதிலாக ரூ.10,000 வழங்கவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக” நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 

தேர்தல் சலுகைகள்:

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, நிதிஷ்குமார் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முன்னதாக, வீட்டு பயன்பாட்டிற்கான முதல் 125 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமே வசூலிக்கப்படாது என அண்மையில் அறிவித்தார். இலவச மின்சாரத்தின் நிதி தாக்கத்தைக் குறைக்க, வீட்டின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களுக்கு, மத்திய அரசு உதவியுடன் 50% மானியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டணியை மாற்றி மாற்றி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து வரும் நிதிஷ்குமார் மீது பீகார் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பலவீனமாக்கி, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் உதவியுடன் நிதிஷ்குமார் பல கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து வருகிறாராம். தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜகவிற்கு மத்தியில் ஆட்சியை உறுதி செய்ய நிதிஷ்குமார் ஆதரவு அவசியமாக உள்ளது. அதனால், அவருக்கான உதவிகளை தயங்காமல் பாஜக செய்வதோடு, பட்ஜெட்டின் போது நிதியை வாரி வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget