மேலும் அறிய

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா காலமானார்

கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னத்தி ஏராக விளங்கிய தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 99.

கரிசல் காட்டு மண்ணை, மனிதர்களை, அவர்தம் வாழ்வியலை தன் எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் பதிவு செய்த முன்னோடி, தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா காலமானார்

சாகித்திய அகாடமி, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற கி.ரா, கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என கொண்டாடப்பட்டவர். நாட்டுப்புற மக்களின் இயல்பான வழக்கு மொழியை இலக்கியத்தில் புகுத்தி, சாமானிய மனிதர்களின் வாழ்வியலை தன் எழுத்துகள் மூலம் மாபெரும் சபைக்கு கொண்டு சேர்த்தவர்.

கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் 1922 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்த கி.ரா, விவசாயியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ”மழைக்கு பள்ளி பக்கம் ஒதுங்கினாலும் வகுப்பறையை பார்க்காமல் மழையையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று சொன்ன கி.ரா-வைதான் புதுச்சேரி பல்கலைக்கழகம் சிறப்பு பேராசிரியராக ஆக்கி தன்னகத்தே அழைத்துக்கொண்டது.


கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா காலமானார்

கரிசல் காட்டை தன் எழுத்துகள் மூலம் தமிழில் கி.ரா பதிவு செய்த பிறகே கரிசல் காட்டு எழுத்தாளர்கள் என்ற ஒரு மரபே உருவாகத் தொடங்கியது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் கோணங்கி, பூமணி, சோ.தர்மன், மேலாண்மை பொன்னுசாமி, தேவதச்சன், தமிழ்ச்செல்வன் போன்ற ஏராளமான எழுத்தாளர்கள் கரிசல் காட்டு இலக்கியத்தை கி.ராவை தொடர்ந்து பதிவு செய்யத் தொடங்கினர். கி.ரா-வையே தங்களது ஆசானாக ஆக்கிக்கொண்ட எழுத்தாளர்கள் இவர்கள். நாட்டார் கதைகளைத் தேடித்தேடி எடுத்து, நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்ற தலைப்பில் தொகுத்து இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு, அவர் எழுதிய கரிசல் வட்டார வழக்கு அகராதி தமிழ் மொழிக்கான கொடை.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மட்டுமின்றி கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் உள்ளிட்ட நாவல்களையும், கிடை, பிஞ்சுகள் ஆகிய குறுநாவல்களையும் எழுதியவர். தன் சமகால எழுத்தாளர்கள் மட்டுமின்றி தனக்கு பின்னர் எழுதத் தொடங்கிய பல்வேறு எழுத்தாளர்களுடன் நட்பு பாரட்டி, அன்பு செலுத்தி, அவர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, எழுத ஊக்கப்படுத்தியவர்.

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழில் ஞானபீட விருது யாருக்கும் இதுவரை அளிக்கப்படவில்லை. அதனை கி.ரா என்ற ஆகச்சிறந்த ஆளுமைக்கு வழங்கப்பட வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற அவரது 95வது பிறந்தநாள் விழாவிலும், 98வது பிறந்தநாள் விழாவிலும் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றாக சேர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் கடைசிவரை அந்த கோரிக்கை மத்திய அரசின் காதுகளுக்கு எட்டாமலேயே போய்விட்டது.


கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா காலமானார்

இளமை முதலே எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டாலும், சர்க்கரை நோய் தாக்கியிருந்தாலும் தன் எழுத்தை எந்த இடத்திலும் விடாமல் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருந்தார் கி.ரா. 99 வயது நிரம்பியிருந்த அவர் 100-வது வயதை இந்த செப்டம்பரில் எட்டும்போது மிகப்பெரிய விழா எடுக்க வேண்டுமென்று தமிழ் இலக்கிய உலகம் கனவுகண்டுக்கொண்டிருந்தது. அந்த கனவுகளை நினைவாக்காமலேயே தனது 99வது வயதில் கரிசல் காட்டில் இழுத்த தனது முதல் மூச்சை புதுச்சேரியில் இறுதியாக வெளியில் விட்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார் கி.ரா.

பெருவாழ்வு வாழ்ந்த கி.ரா என்ற ஆளுமையின் மறைவு தமிழ் எழுத்துலகிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு !

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Upcoming Smartphones in 2026: Vivo முதல் Xiaomi வரை; புத்தாண்டில் சந்தைக்கு வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்; முழு லிஸ்ட் இதோ...
Vivo முதல் Xiaomi வரை; புத்தாண்டில் சந்தைக்கு வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்; முழு லிஸ்ட் இதோ...
ABP Premium

வீடியோ

GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Upcoming Smartphones in 2026: Vivo முதல் Xiaomi வரை; புத்தாண்டில் சந்தைக்கு வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்; முழு லிஸ்ட் இதோ...
Vivo முதல் Xiaomi வரை; புத்தாண்டில் சந்தைக்கு வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்; முழு லிஸ்ட் இதோ...
New Bajaj Pulsar 150: புதுப்பொலிவுடன் அசத்தும் பஜாஜ் பல்சர் 150; எல்இடி விளக்குகள், புதிய நிறம்; இன்னும் என்ன சிறப்பு.?
புதுப்பொலிவுடன் அசத்தும் பஜாஜ் பல்சர் 150; எல்இடி விளக்குகள், புதிய நிறம்; இன்னும் என்ன சிறப்பு.?
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
Embed widget