மேலும் அறிய

CM Stalin: ”சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக”.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பட்டியலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்  இருக்கும் நிலையில் அதனை மத்திய அரசுதான் மேற்கொள்ள முடியும். அதேசமயம் மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாத சூழல் இருந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்கள் தொகையை தவிர மற்ற சாதிகளின் மக்கள் தொகையை கணக்கெடுக்க முடியாது என மத்திய அரசு கடந்த ஆண்டு விளக்கமளித்திருந்தது.

இதனிடையே சமீபத்தில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை  நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அதிரடியாக எடுத்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற தொடங்கியுள்ளது. 

இப்படியான நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும். 

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும். இதற்காக மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும் என்றும் சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கடந்த 90 ஆண்டுகளில் நம் நாட்டின் நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதாரம்  பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. நமது சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் பல கடந்தகால கொள்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே சமூக நீதி, சமத்துவம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க தேசிய அளவில் ஒரு கணக்கெடுப்பு என்பது தேவையானதாக உள்ளது. 

இதில் பீகார் அரசு நல்ல முயற்சிகளை மேற்கொண்டு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதோடு, சில மாநில அரசுகள் அதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளது எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்..  Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்.. Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Embed widget