மேலும் அறிய

ஊதிய உயர்வு வேண்டும்: தூத்துக்குடியில் நாளை முதல் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் அலட்சிய போக்கினால் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 32 மாதங்கள் கடந்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஊதிய உயர்வு கோரி துறைமுகத்தொழிலாளர்கள் நாடு முழுவதும் நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் இதனால் துறைமுகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஊதிய உயர்வு வேண்டும்: தூத்துக்குடியில் நாளை முதல் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

இது தொடர்பாக சிஐடியு மாநில செயலாளர் ரசல், ஐஎன்டி யூசி அமைப்பு செயலாளர் கதிர்வேல், தூத்துக்குடி  துறைமுக ஆணைய உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஹச்.எம்.எஸ் தலைவர் சுரேஷ், துறைமுக அண்ணா தொழிற்சங்க தலைவர் சண்முக சுந்தரி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தூத்துக்குடியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


ஊதிய உயர்வு வேண்டும்: தூத்துக்குடியில் நாளை முதல் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

அப்போது கூறிய அவர்கள், நாடும் முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் 3வது மற்றும் 4 வது நிலை தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். கடந்த 1-1-2022 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக சுமுகத் தீர்வு ஏற்படவில்லை. மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.


ஊதிய உயர்வு வேண்டும்: தூத்துக்குடியில் நாளை முதல் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

மேலும் வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து தனியார் மையமாக்கி வருகிறது. இதனால் பெரிய துறைமுகங்களில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. துறைமுகங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 20,000 நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றிய வருகின்றனர்.இந்த நிலையில் 3-வது மற்றும் 4-ம்  நிலையில் பணியில் நிரந்தர தொழிலாளர்களை நியமிக்காமல் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க மத்திய கப்பல் துறை அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஊதிய உயர்வு வேண்டும்: தூத்துக்குடியில் நாளை முதல் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

இதன் காரணமாக வேலைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர் விரோதப் போக்கினை கைவிடக் கோரியும் துறைமுக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பெரும் துறைமுகங்களில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். துறைமுகங்களில் செயல்படும் 5 சம்மேளனங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் 8 தொழிற்சங்களை சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தனியார் கப்பல் தள பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இதனால் துறைமுகப் பணிகள் 100% முடங்கும் நிலை உள்ளது. எனவே மத்திய அமைச்சகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்

தலைப்பு செய்திகள்

NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
"வாடி வாடி கைப்படாத சிடி..." ஆபாசப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர்..!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget