மேலும் அறிய

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு: கடந்த முறையை விட 34 வாக்குகள் குறைவாக பதிவு

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியில் கடந்த முறையை காட்டிலும் 34 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேளச்சேரியில் இருவர் வாக்கு இயந்திரங்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதலில் அவர்கள் தேர்தல் பணியாளர்கள் என்றும், அவர்கள் கொண்டு சென்றது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தாத வாக்கு இயந்திரங்கள் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ கூறினார்.

விசாரணையில் அந்த வாக்குச்சாவடிகள் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட சீதாராம் நகரில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 92வது வாக்குச்சாவடி மையத்தில் ஒரு மணிநேரம் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


வேளச்சேரி மறுவாக்குப்பதிவு: கடந்த முறையை விட 34 வாக்குகள் குறைவாக பதிவு

இதன்படி, இன்று காலை 7 மணிக்கு வேளச்சேரி, சீதாராம் நகரில் டி.ஏ.வி. பள்ளியில் 92வது வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 548 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியான நபர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் ஆண் வாக்காளர்கள் ஆவர். மறு வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கையில் உள்ள நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

காலை முதல் வாக்குப்பதிவு மந்த நிலையிலே காணப்பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி, 175 நபர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். இறுதியாக, வாக்குப்பதிவு 7 மணிக்கு நிறைவு பெற்றபோது 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. 548 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க இருந்த இந்த வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

கடந்த 6-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 220 வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது நடைபெற்ற வாக்குப்பதிவில் 34 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பிறகு, வாக்கு இயந்திரம் உரிய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹசன் மவுலானா, அ.தி.மு.க. சார்பில் அசோக் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget