மேலும் அறிய

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு: கடந்த முறையை விட 34 வாக்குகள் குறைவாக பதிவு

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியில் கடந்த முறையை காட்டிலும் 34 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேளச்சேரியில் இருவர் வாக்கு இயந்திரங்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதலில் அவர்கள் தேர்தல் பணியாளர்கள் என்றும், அவர்கள் கொண்டு சென்றது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தாத வாக்கு இயந்திரங்கள் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ கூறினார்.

விசாரணையில் அந்த வாக்குச்சாவடிகள் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட சீதாராம் நகரில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 92வது வாக்குச்சாவடி மையத்தில் ஒரு மணிநேரம் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


வேளச்சேரி மறுவாக்குப்பதிவு: கடந்த முறையை விட 34 வாக்குகள் குறைவாக பதிவு

இதன்படி, இன்று காலை 7 மணிக்கு வேளச்சேரி, சீதாராம் நகரில் டி.ஏ.வி. பள்ளியில் 92வது வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 548 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியான நபர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் ஆண் வாக்காளர்கள் ஆவர். மறு வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கையில் உள்ள நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

காலை முதல் வாக்குப்பதிவு மந்த நிலையிலே காணப்பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி, 175 நபர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். இறுதியாக, வாக்குப்பதிவு 7 மணிக்கு நிறைவு பெற்றபோது 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. 548 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க இருந்த இந்த வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

கடந்த 6-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 220 வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது நடைபெற்ற வாக்குப்பதிவில் 34 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பிறகு, வாக்கு இயந்திரம் உரிய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹசன் மவுலானா, அ.தி.மு.க. சார்பில் அசோக் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget