மேலும் அறிய

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் திடீர் மூடல்: பொதுமக்கள் கடும் அவதி! என்ன காரணம்? விவரம் உள்ளே!

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளான சான்றிதழ்கள், பட்டா மாற்றம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கோரிக்கைகளுக்காக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை வருகை தந்தனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றதன் காரணமாகவே சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அலுவலகம் மூடப்பட்டதால், வெகுதூரம் பயணம் செய்து வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் திடீர் மூடல்: பொதுமக்கள் கடும் அவதி! என்ன காரணம்? விவரம் உள்ளே!

ஊழியர்களின் போராட்டம்

வருவாய்த் துறையில் நிலுவையில் உள்ள நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஒருநாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையில் தர்ணா போராட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர் உட்பட அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் என அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு போராட்டத்திற்குச் சென்றனர்.

 

இதன் காரணமாக, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் இன்று காலை முதல் முற்றிலும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக பரபரப்பாக இயங்கும் அலுவலகம், இன்று அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்தது. பிரதான கதவு மூடப்பட்டிருந்த நிலையில், அலுவலக வளாகத்திற்குள்ளும், வெளியேயும் எந்த ஊழியர்களும் இல்லை.


சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் திடீர் மூடல்: பொதுமக்கள் கடும் அவதி! என்ன காரணம்? விவரம் உள்ளே!

பொதுமக்கள் அவதி

அலுவலர்களின் போராட்டம் குறித்த எந்தவித முன்னறிவிப்பும் இல்லாததால், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான மங்கைமடம், அகரவள்ளி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம், பூம்புகார் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று காலை சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.

குறிப்பாக, தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கோரிக்கைகள், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், இ-சேவை மையம் தொடர்பான பணிகள் என பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக அவர்கள் வந்திருந்தனர். தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த பொதுமக்கள், அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.

பல மணி நேரம் அலுவலகத்தின் முன் காத்திருந்த அவர்கள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் கழித்துதான், வருவாய்த் துறையினர் போராட்டத்தின் காரணமாகவே அலுவலகம் மூடப்பட்டுள்ளது என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.


சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் திடீர் மூடல்: பொதுமக்கள் கடும் அவதி! என்ன காரணம்? விவரம் உள்ளே!

ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

கூட்டம் கூட்டமாக வந்து காத்திருந்த பொதுமக்கள் மத்தியில், "போராட்டம் என்றால் குறைந்தபட்சம் ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டிருக்கலாமே? தொலைதூரத்தில் இருந்து வரும் எங்களைப் போன்றவர்கள் என்ன செய்வது?" என்ற ஆதங்கக் குரல்கள் ஒலித்தன.

"நான் வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து வருகிறேன். என் மகளின் கல்லூரி சேர்க்கைக்கு வருமானச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதை வாங்குவதற்காக வந்தேன். ஆனால் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது. முன்னறிவிப்பு இல்லாததால் என் ஒருநாள் வேலை வீணாகிவிட்டது," என்று ஒரு தாயார் வருத்தத்துடன் தெரிவித்தார்.

"எனது பட்டா மாற்றம் சம்பந்தமான வேலைக்கு வந்தேன். இன்று முடிந்தால் அடுத்த கட்ட வேலைகளைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். இப்போது அலுவலகம் பூட்டி இருப்பதால், மீண்டும் ஒருநாள் விடுப்பு எடுத்து வர வேண்டும்," என்று மற்றொருவர் கூறினார்.

அலுவலகத்தின் முன் எந்தவித அறிவிப்புப் பலகையும் இல்லாததும், போராட்ட விவரம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் எதுவும் விநியோகிக்கப்படாததும் பொதுமக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியது. பல மணிநேரம் காத்திருந்த பிறகு, எந்தவித தீர்வும் கிடைக்காததால், ஏமாற்றத்துடனும், சோர்வுடனும்பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Gold Silver Rate New Peak: ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Embed widget