Mayiladuthurai Power Shutdown (26.06.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதில் உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown 26.06.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (26.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
சீர்காழி மின் கோட்ட செய்தி குறிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளைய 26.06.2025 வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி மின்வாரிய கோட்டத்திலும் நாளை தினம் வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் எடமணல் ஆகிய துணைமின் நிலையங்களில் மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சீர்காழி மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர்கள் மூர்த்தி வெளியியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்
ஆச்சாள்புரம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், அளக்குடி, தைக்கால், காட்டூர் , மகேந்திரபள்ளி, முதலைமேடு, கோதண்டபுரம், வெள்ளமணல், மாதானம், துளசேந்திரபுரம், கோபால சமுத்திரம், பழையார், தாண்டவன்குளம், புளியந்துறை, புதுப்பட்டினம், மடவாமேடு, தர்க்காஸ், அரசூர், புத்தூர், எருக்கூர், ஆனந்தகூத்தன், சோதியக்குடி, பொன்னங்காத்துப்படுகை, சிதம்பரநாதபுரம், மேலமாத்தூர், கீழமாத்தூர், ஓலையாம் புத்தூர், காப்பியக்குடி, மணளகரம், மாதிரவேளூர், வடரங்கம், அகணி,குன்னம் திருமுல்லைவாசல்,திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, திருக்கருக்காவூர், கூழையார், தொடுவாய் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் குத்தாலம் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேக்கிரிமங்கலம் மற்றும் குத்தாலம் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் 26.06.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும், பழையகூடலூர், கொக்கூர், திருவாலங்காடு, திருவாடுதுறை, பேராவூர், குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரி மங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கீழவெளி, அகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.






















