மேலும் அறிய

DMK CONGRESS Alliance : திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்

DMK CONGRESS Alliance : சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில், இரவோடு இரவாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வந்தார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என நிபந்தனையை விதித்தது. ஒரு கட்டத்தில் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் திமுகவை மிரட்டி வந்தது.

தவெகவுடன் கூட்டணி- மிரட்டிய காங்கிரஸ்

காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யிடம் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி வந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் வந்த அழுத்தம் காரணமாக கூட்டணி கட்சிகளோடு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை கடந்த 28ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20% இடம் வழங்க வேண்டும் என்ற பட்டியலை கொடுக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு ஆதரவாக காங். எம்எல்ஏக்கள்

ஆனால் திமுகவோ கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்து விட்டது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஸ் சோடங்கர், இனி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச தான் செல்லவில்லையென தலைமைக்கு கடிதமாகவே கொடுத்துவிட்டார். இந்த சூழலில் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், தொடரட்டும் இல்லையென்றால் கூட்டணியை விட்டு செல்லட்டும் என்ற முடிவிற்கு திமுக வந்துவிட்டதாகவே கூறப்பட்டது. 

இந்தநிலையில் தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபல், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து கேட்டுள்ளார். அதற்கு பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணி தான் பெஸ்ட் என தெரிவித்துள்ளனர். ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது எனவும், பாஜகவைப்பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத விஜய்யுடன் எப்படி காங்கிரஸ் கூட்டணி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் திமுக ஆதரவு கருத்தை தெரிவித்ததால்,  திமுக தலைமையை சமாதானம் செய்யும் வகையில் இறுதிகட்ட முயற்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை களத்தில் இறக்கினார் சோனியா காந்தி,

பா.சிதம்பரத்தால் ஏற்பட்ட மாற்றம்

அந்த வகையில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்தது. ஆனால் 30 தொகுதிக்கு குறைய கூடாது என ராகுல் காந்தி உறுதியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு மீண்டும் திமுக- காங்கிரஸ் கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் 28  தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனை  இரவோடு இரவாக ப சிதம்பரம் ராகுல்காந்திக்கு தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி முக்கியமல்ல கூட்டணியும், நட்பு தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். இதற்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தரப்பு ஒப்புக்கொண்டதையடுத்து இன்று மதியம் அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகிறது. எனவே இன்று மதியம் திமுகவுடன் முதலில் ராஜ்யசபா சீட ஒதுக்கீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்டமாக தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செயப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget