மேலும் அறிய

சீர்காழி: இடிந்து விழுந்த கட்டடம் - அலட்சியம் தொடர்ந்தால் பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில், பிடாரி வடக்கு வீதியில் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாடில்லாமல் சிதிலமடைந்து கிடந்த பழமையான ஓட்டு வீட்டு கட்டடத்தின் ஒரு பகுதி, கனமழையின் காரணமாகத் திடீரென இடிந்து சாலையோரம் விழுந்தது. நகராட்சி வளாகத்தின் அருகாமையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததோடு, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இடிபாடுகள் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் உயிரில்  அலட்சியம்

சீர்காழி நகராட்சியின் பிரதான பகுதியாகவும், வணிகப் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் பிடாரி வடக்கு வீதி உள்ளது. இங்கு நகராட்சி அலுவலக வளாகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக, தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் அலுவல் நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

இந்த முக்கிய வீதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையான ஓர் ஓட்டு வீட்டின் கட்டடம் எந்தப் பராமரிப்புமின்றிச் சிதிலமடைந்து கிடந்தது. அதன் சுவர்கள் மற்றும் கூரைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அது எந்நேரமும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் அதன்காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கட்டடத்தின் நிலை மேலும் மோசமடையவே, தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, அருகில் இருந்த சாலையோரத்தில் விழுந்தது.

வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்ட அதிர்ச்சி

கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, அந்தச் சாலையோரத்தில் மீன் விற்பனை, பானிபூரி விற்பனை உள்ளிட்ட பல வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். மேலும், நகராட்சி மற்றும் வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அதிக அளவில் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, இடிந்து விழுந்த கட்டடத்தின் பாகங்கள் யாருடைய மீதும் விழாமல், பெரும் அசம்பாவிதம் ஏதும் இன்றித் தப்பியது. இருப்பினும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் திடீரெனக் கட்டடம் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருசில விநாடிகள் முன்னரோ பின்னரோ கட்டடம் இடிந்திருந்தால், உயிரிழப்பு உட்படப் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

உறுப்பினர் வலியுறுத்தல்

கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் இடிபாடுகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றி விசாரித்தார். ஆபத்தான நிலையில் உள்ள இக்கட்டடத்தின் அருகில் நகராட்சிக்கு வரும் பொதுமக்கள், வங்கிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் எனப் பல தரப்பினரும் அதிக அளவில் வந்து செல்லும் நிலையைக் கருத்தில் கொண்ட அவர், மீதமுள்ள கட்டடமும் விரைவில் இடிந்து மேலும் ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து, நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு அவர்கள் உடனடியாகச் சீர்காழி நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்துப் பேசினார்.

நகர் மன்ற உறுப்பினர் வைத்த அவசர கோரிக்கை

"பிடாரி வடக்கு வீதியில் இடிந்து விழுந்த கட்டடம் என்பது நகரின் மையப் பகுதியில் உள்ளது. எஞ்சியுள்ள கட்டடப் பகுதியும் மிகவும் பலவீனமாக உள்ளது. இது, நகராட்சி மற்றும் வங்கிகளுக்கு வரும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, ஆணையர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ள அந்த வீட்டினை முழுமையாக இடித்து அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பை உறுதி செய்க!

பழமையான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் நகர்ப் பகுதிகளில் இருக்கும்போது, அவற்றைப் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலின்றி அகற்றுவது நகராட்சியின் முக்கியக் கடமையாகும். குறிப்பாக, நகராட்சி வளாகத்தின் அருகாமையிலேயே உள்ள இந்தக் கட்டடத்தின் நிலையை நிர்வாகம் இவ்வளவு காலம் கவனிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாகக் கட்டடத்தின் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கி, கட்டடத்தின் எஞ்சிய பகுதியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது நகராட்சியே அதனை அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நகர் மன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

சீர்காழி நகராட்சி ஆணையர், இடிந்துவிழும் நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, எந்தவிதத் தாமதமும் இன்றி அதனை முழுமையாக இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"சிவனின் இளைய மகன் பெயர்கொண்டவரே மீண்டும் முதல்வர்" - ஓலைச்சுவடி ஆருடத்தால் பரபரப்பு!
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
மயிலாடுதுறை: தீக்கிரையான ஆம்னி வேன்... உறவினர்களை இறக்கிவிட்டு திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்..
மயிலாடுதுறை: தீக்கிரையான ஆம்னி வேன்... உறவினர்களை இறக்கிவிட்டு திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்..
பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!
பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
Embed widget