மேலும் அறிய

1000 ஆண்டுகள் பழமையான கீழையூர் கைலாசநாதர் ஆலயம் - குடமுழுக்கு செய்ய அரசுக்கு பக்தர்கள் உருக்கமாக கோரிக்கை..!

1000 ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கீழையூர் கைலாசநாதர் ஆலயத்தை புரனமைத்து குடமுழுக்கு செய்ய அரசுக்கு பக்தர்கள் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழையூர் கிராமத்தில் சுமார் 1050 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் சிவாலயம் சிதிலமடைந்துள்ள உள்ளது. இந்நிலையில், அதனை உடனடியாகச் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கிராம மக்களும், பக்தர்களும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையின் பெருமையும் சிதைவின் சோகமும்

வரலாற்றுச் சிறப்புமிக்க கீழையூர் கிராமம், பல நூற்றாண்டுகளாகப் பல கதைகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. இங்குள்ள கைலாசநாதர் ஆலயம், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது தர்மர் வழிபட்ட ஸ்தலம் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த ஆலயம் யவனர்கள் தங்கி வணிகம் செய்ததற்கான சான்று கல்வெட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மிக முக்கியமாக, தமிழகத்தில் காணப்படும் மூன்று கைலாசநாதர் கல்வெட்டுக் கோயில்களில் இதுவும் ஒன்று என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.


1000 ஆண்டுகள் பழமையான கீழையூர் கைலாசநாதர் ஆலயம் - குடமுழுக்கு செய்ய அரசுக்கு பக்தர்கள் உருக்கமாக கோரிக்கை..!

சுமார் 1050 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இச்சரித்திரச் சின்னம், காலப்போக்கில் உரிய பராமரிப்பு இன்றி மிக மோசமாகச் சிதிலமடைந்துள்ளது. கருவறைக்குள் சென்று பூஜைகள் செய்ய முடியாத அளவுக்கு முட்புதர்களாலும், பெரிய மரங்களாலும் கோயில் வளாகம் சூழப்பட்டு, முற்றிலும் பாழடைந்த நிலையில் காட்சியளித்தது. ஆலயத்தின் கட்டட அமைப்புகளும் சேதமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

சிவனடியார்களின் தன்னலமற்ற உழவாரப் பணி

இக்கோயிலின் அவலநிலையைக் கண்ட கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள், இச்சிவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜோலார்பேட்டை திருஆரூரான் உழவாரத் திருப்பணி அறக்கட்டளைக் குழுவினர் முன்வந்தனர். சமீபத்தில், இக்குழுவைச் சேர்ந்த சுமார் 60 சிவனடியார்கள் இணைந்து, கீழையூர் கைலாசநாதர் ஆலயத்தில் மாபெரும் உழவாரத் திருப்பணியை மேற்கொண்டனர்.


1000 ஆண்டுகள் பழமையான கீழையூர் கைலாசநாதர் ஆலயம் - குடமுழுக்கு செய்ய அரசுக்கு பக்தர்கள் உருக்கமாக கோரிக்கை..!

பல நாட்கள் நீடித்த இந்தத் தன்னலமற்ற பணியின் மூலம், கோயில் வளாகத்தை ஆக்கிரமித்திருந்த மரங்களும் முட்புதர்களும் அகற்றப்பட்டன. அதன் விளைவாக, தற்போது பக்தர்கள் உள்ளே சென்று தரிசனம் செய்யவும், அன்றாடப் பூஜைகள் செய்யவும் ஒரு வழி ஏற்பட்டுள்ளது.

உழவாரப் பணியின் நோக்கம்

சிதிலமடைந்து கிடந்த ஆலயத்தை மீட்டு, அதன் பழைமைச் சிறப்பு சிறிதும் குலையாமல், மீண்டும் உயிர்ப்பித்து, பக்தர்கள் வழிபடும் தலமாக மாற்றியமைப்பதே உழவாரப் பணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அரசுக்குக் கோரிக்கை

சிவனடியார்களின் அயராத முயற்சியால் ஆலய வளாகம் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்ட போதிலும், பல நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயிலை ஸ்த்திரப்படி முழுமையாகச் சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆலயத்தின் கட்டட அமைப்புகள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பாதுகாத்து, முறையாகப் புனரமைக்க வேண்டும்.

எனவே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருக்கோயிலின் பெருமையைக் காக்கும் பொருட்டு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பக்தர்களின் முக்கிய கோரிக்கைகள்

  • ஆலயப் புனரமைப்பு: சுமார் 1050 ஆண்டுகள் பழமையான மூலக் கட்டடத்தை அதன் பழைமை மாறாமல், தரமான முறையில் முழுமையாகச் சீரமைக்க வேண்டும்.
  • கும்பாபிஷேகம்: புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், குறுகிய கால அவகாசத்தில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும்.

கீழையூர் கைலாசநாதர் ஆலயத்தை உடனடியாகக் கண்டறிந்து, அதன் தொன்மையை நிலைநாட்டி, விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதன் மூலம், இந்தத் தலம் மீண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை என பக்தர்கள் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாகக் கீழையூர் கைலாசநாதர் ஆலயத்தைப் பார்வையிட்டு, அதன் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்திற்கான திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்து, விரைந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget