மேலும் அறிய

ஆட்சியர் செயல்பாடு காரணமாக குவியும் மனுக்கள் - எந்த மாவட்டம் அது தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை அடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது ஆட்சியர் அதிக முக்கியத்துவம் கொடுத்து தீர்வு கண்டு வருவதால் ஆட்சியர் மீது கொண்ட நம்பிக்கையால் மனு அளிப்பவர்களின் எண்ணிக்கை வாரம்தோறும் அதிகரித்து வருகிறது. 

மக்கள் குறைதீர் கூட்ட நாள்

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறைதீர் கூட்ட நாள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது ஆட்சியாளராக பொறுப்பேற்ற மகாபாரதி பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆட்சியர் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று திகழ்ந்து வருகிறார். 


ஆட்சியர் செயல்பாடு காரணமாக குவியும் மனுக்கள் - எந்த மாவட்டம் அது தெரியுமா?

மக்கள் நம்பிக்கை பெற்ற ஆட்சியர் 

குறிப்பாக ஆட்சியாளர் கவனத்திற்கு வரும் பிரச்சனைகள் அனைத்திலும் தனி கவனம் செலுத்தி அதனை சரி செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை கேட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அந்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளையும் தனக்கு சமர்ப்பிக்க கூறி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவருவதால முன்பு எப்போதும் இல்லாத அளவாக தற்போது குறைதீர்க்க கூட்டத்திற்கு ஆட்சியர் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக ஏராளமான மக்கள் படையெடுத்து வந்து தங்கள் குறைகளை மனுவாக சமர்ப்பித்து செல்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் அவருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அன்றைய தினமே பணிக்கு திரும்பி மக்கள் குறைகளை கேட்டறிந்தார். இது மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.


ஆட்சியர் செயல்பாடு காரணமாக குவியும் மனுக்கள் - எந்த மாவட்டம் அது தெரியுமா?

ஒரே நாளில் பெறப்பட்ட 369 மனுக்கள் 

அதன் ஒன்றாக இன்று மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் 369 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகள் குறித்து மனுக்களை அளித்தனர். 


ஆட்சியர் செயல்பாடு காரணமாக குவியும் மனுக்கள் - எந்த மாவட்டம் அது தெரியுமா?

மனுக்களின் விபரம் 

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 68 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 79 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 47 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 38 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 23 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 18 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 29 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 39 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 27 மனுக்களும் என மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.   


ஆட்சியர் செயல்பாடு காரணமாக குவியும் மனுக்கள் - எந்த மாவட்டம் அது தெரியுமா?

நலத்திட்ட உதவிகள் 

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா 5900 ரூபாய் என மொத்தம் 29,500 ரூபாய் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
DMK Congress Alliance:28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
Embed widget