மேலும் அறிய

சாதித்துக் காட்டிய மயிலாடுதுறை மாவட்டம்; ஆட்சியர் பெருமிதம் - முழு விபரம் உள்ளே

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் 233 மாணவர்களுக்கு 6 கோடியே 74 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான கல்வி கடனுதவிகளை வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து 233 பயனாளிகளுக்கு 6 கோடியே 74 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி கடன் உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் உத்தரவின் படி, மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, மாவட்ட முன்னோடி வங்கியாக திகழும் "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி" மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது.


சாதித்துக் காட்டிய மயிலாடுதுறை மாவட்டம்; ஆட்சியர் பெருமிதம் - முழு விபரம் உள்ளே

கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் மயிலாடுதுறை

தமிழக அளவில் பல்வேறு கடன் உதவி வழங்குவதில், நமது மயிலாடுதுறை மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் அனைத்து கடனுதவி வழங்குவதிலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டிய வளர்ச்சி பெற்று நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது. UYEGP எனப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் கடனுதவி வழங்கும் திட்டத்தில், நாளது தேதியில் இலக்கை தாண்டிய கடனுதவிகள் வழங்கி தமிழகத்தில் முதன்மையான மாவட்டமாக நமது மயிலாடுதுறை மாவட்டம் திகழ்கிறது.  AABCS (அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்), NEEDS ஆகிய இரண்டு திட்டங்களிலும் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடனுதவி வழங்கி மாநிலத்தில் மூன்றாவது மாவட்டமாக திகழ்கிறது. நமது மாவட்டத்தில் உள்ள வங்கிகள் கொடுத்த கடனுதவிகளால், நமது மாவட்ட தொழில் மையமானது, தமிழகத்தில் “சிறந்த தொழில்மையம்" என்னும் விருதையும் பெற்று சிறந்து விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி வழங்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு, இலக்கினை எட்டியுள்ளோம்.


சாதித்துக் காட்டிய மயிலாடுதுறை மாவட்டம்; ஆட்சியர் பெருமிதம் - முழு விபரம் உள்ளே

2500 மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்க இலக்கு 

நமது மாவட்டத்தில் 2500 மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்க தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில், நடைபெறும் முகாமில் மட்டும் சுமார் 233 மாணவ,  மாணவியர்களுக்கு ஆறு கோடியே எழுபத்தி நான்கு லட்சத்து அறுபத்து நான்கு ஆயிரம் ரூபாய் கடனுதவி, நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கியான ஐஓபி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வழங்கப்படுகிறது.  இந்த சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் www.vidyalaksmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று. விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து கடன் வழங்கப்படும். 


சாதித்துக் காட்டிய மயிலாடுதுறை மாவட்டம்; ஆட்சியர் பெருமிதம் - முழு விபரம் உள்ளே

கல்விக்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்:

தேவைப்படும் ஆவணங்கள்: www.vidyalaksmi.co.in இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி Joint account பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர்மணிமேகலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி,பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராமநாதன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி அருண் விக்னேஷ் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
மயிலாடுதுறை: தீக்கிரையான ஆம்னி வேன்... உறவினர்களை இறக்கிவிட்டு திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்..
மயிலாடுதுறை: தீக்கிரையான ஆம்னி வேன்... உறவினர்களை இறக்கிவிட்டு திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்..
பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!
பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!
குன்னம் கிராமத்தையே நடுங்க வைத்த 'அந்த' 7 அடி உருவம்... இப்போது எங்கே?
குன்னம் கிராமத்தையே நடுங்க வைத்த 'அந்த' 7 அடி உருவம்... இப்போது எங்கே?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
Edappadi Palanisamy: “திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
“திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
"QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி
Embed widget