மேலும் அறிய

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

முழு ஊரடங்கில் பொதுமக்கள் வசதிக்காக வீடு தேடி காய்கறிகள் வினியோகம் செய்யும் மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு வழக்கறிஞர்கள் குழுவினர் ஆதரவு தெரிவித்து, அப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் வீடுகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழுவினரும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
 
 

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!
 
24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும்  புதிதாக இரண்டேகால் லட்சத்திற்கும் அதிகமானோர்  கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2,67,52,447 என்ற எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. மேலும்   இந்தியாவில்  கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,03,720 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொருத்தவரை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என  நேற்று முதல் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு அமலுக்கு வந்தது.
 

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!
 
கடந்த 14 நாள்களாக அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காலை 10 மணி வரையிலும் மளிகைக் கடைகள் திறந்திருந்தன. அதைக் காரணமாக வைத்து மக்கள் பலர் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
 

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!
 
அத்தியாவசிய பட்டியலில் மருந்தகம், கால்நடை மருந்தகம், நாட்டு மருந்து மருந்தகம், பெட்ரோல் பங்க், ஏ.டி.எம், பால்,  தண்ணீர் விநியோகம் போன்ற மிகவும் அவசியமான ஒரு சில பணிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நபரைத் தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!
 
 
இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியாக பொதுமக்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.  மதுரை மாநகராட்சி சார்பாக 100 வார்டுகளுக்கு 125 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய பைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 15 இலகுரக வாகனங்கள் மூலம் ரூ.100 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு பைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையர் விசாகன் துவக்கி வைத்தார்.
 
 

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!
 
 
இந்த காய்கறி தொகுப்பில் தக்காளி, வெண்டிக்காய், அவரக்காய், செளசெள, உருளைக்கிழங்கு, தேங்காய், கத்தரிக்காய், வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய மொத்த காய்கறி தொகுப்பு அங்காடியில் இருந்து நேரடியாக மலிவுவிலையில் பெறப்பட்டு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் தன்னார்வலர்களாக வாநண்பா குழுவினர், வழக்கறிஞர்கள், சந்தோஷ்குமார் குழுவினர், செஞ்சுலுவை சங்கத்தினர் ஆகிய குழுவினரால் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை விற்பனை செய்யப்படும் என  தெரிவித்தனர்.
 
 

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!
 
மேலும் வழக்கறிஞர் முத்துக்குமார்கூறுகையில், ‛‛முதல் பேரலையின் போதே மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டோம். அதே போல் இரண்டாவது பேரலையிலும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளோம். இன்று முதல் கட்டமாக 25 வாகனத்தில் 5 வாகனத்தில் வழக்கறிஞர்களும் மற்ற வாகனங்களில் சமூக ஆர்வலர்களும் செயல்பட்டனர். பேக்கிங் செய்த காய்கறியை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் விற்பனை செய்யமுடிகிறது. மாநகராட்சி எங்களுக்கு முககவசம், கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளையும் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் செயல்படுகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் வழக்கறிஞர்களாகிய நாங்களும் செயல்பட்டுள்ளோம் என்பது எங்களுக்கு பெருமைக்குறியது” என்று நெகிழ்ந்தார்
 
 
 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget