ஒரே ஆண்டில் பாதியாக குறைந்த ஏலக்காய் விலை - சோகத்தின் தேனி விவசாயிகள்...!
’’கடந்த ஆண்டு 2000 ரூபாய்க்கு விற்பனையான ஏலக்காய் விலையானது தற்போது 1152 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் வேதனை’’

கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏலக்காய் தோட்டங்களில் விளைச்சல் இல்லாததால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைவாக உள்ளது. இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏலம் நடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஏலம் நடை பெற்று வருகிறது.
இந்த முறை தேனி மாவட்டம் கோவையில் உள்ள தனியார் ஆன்லைன் ஏல மையத்தில் ஏலக்காய்கான ஏலம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் 95,821 கிலோ ஏலக்காய் பதிவு செய்யப்பட்டு, 360 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த ஆன்லைன் ஏலத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஏலக்காய் வாங்குவதில் மும்மரம் காட்டினார். இந்த ஏலத்தில் ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்ச விலையாக 1,152-க்கு விற்பனையானது.
இதுகுறித்து ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலர் கூறுகையில், " கொரோனா காலத்தில் ஏலம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஏலக்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை சற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு கிலோ இரண்டாயிரத்துக்கும் மேல் விற்ற ஏலக்காய் தற்போது வரத்து உள்ளதால் அதிக பட்ச விலையாக 1,152 க்கு விற்பனையானது. இந்த விலை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலேயே உள்ளது. இங்கு உள்ள விவசாயிகள் அனைவரும் அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து ஏலத்தில் பங்கேற்றனர்" என்றனர்.
Madurai DMK | பதவிகள் விற்பனை.. போஸ்டரில் போர்.. உட்கட்சி பூசலில் வெடித்துச்சிதறும் மதுரை திமுக!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

