மேலும் அறிய
காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறிவிட்டனர்.. கம்யூனிஸ்ட் குறித்து சீமான் தாக்கு !
சி.பி.எம் 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி, பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்ட நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது.

சீமான்
Source : whats app
கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி விட்டது என மதுரையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார்.
வழக்கில் உடன்பாடு எட்டத்தேவையில்லை
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது. என் மீது பதியப்பட்டுள்ள வழக்கு ஆதாரமில்லாத அவதூறான வழக்கு. 15 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வழக்கில் உடன்பாடு செய்ய வாய்ப்புமில்லை. அப்படி உடன்பாடு ஏற்பட தேவையுமில்லை.
நீதிமன்றம் சொல்லாதபோது என்னை பாலியல் குற்றவாளி என்கிறார்
திருமணம் செய்யக்கூடாது என்பது பெரியாரின் கோட்பாடு. Enjoyment with out Responsibility என பெரியார் கூறினார். ஆனால், எனக்கு எதிராக பெரியார் பக்தர்கள் பேசுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளது. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த பொதுப் பிரச்னைக்கு போராடி வருகிறது. தமிழகத்தில் நடைபெறக்கூடிய பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்.
6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போராட அனுமதிக்காத அரசும் இதில் குற்றவாளியாக தானே உள்ளது. இதில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜீவானந்தத்துடன் செத்துப் போய்விட்டது. சங்கரய்யாவுடன் முடிந்து போய் விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் வாழும் மனித புனித தலைவர் அய்யா நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை. சிபிஎம் 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி, பெற்று எதிர்கட்சியாக செயல்பட்ட நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது.
தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது
இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி, போராட்டங்களை எல்லாம் வறட்சியாக்கிவிட்டது. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்கிஸியம் இருக்கு, மார்க்கிஸிய தலைவர்கள் எங்கே?, தமிழகத்தில் மார்க்கிஸ்ட் தலைவர்களை பிடிக்காமல் இல்லை. தலைவர்களிடம் செயல்பாடுகள் எங்கே?, என்னை அவப்பெயரை ஏற்படுத்தி இழிவு படுத்த வேண்டுமென செயல்படுகின்றனர். நடிகை விஜயலட்சுமி என்னை மட்டுமல்லாமல் எனது தாய், மனைவி குறித்தும் பேசுகிறார். இவ்வழக்கில் 15 ஆண்டுகளாக அமைதி காத்தேன். இவ்விவாகரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதால் நீதிமன்றத்தை நாடி உள்ளேன். தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் கூறியுள்ளார், அப்படி என்றால் தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது தானே?" என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "அப்பாவிற்கும் காது குத்துங்க.. " மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை - சிவகங்கையில் நெகிழ்ச்சி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion