மேலும் அறிய

மதுரையில் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் - சு.வெங்கடேசன் கோரிக்கை !

மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை நகராட்சித் துறை அமைச்சர் மற்றும் நகராட்சி துறை தலைமைச் செயலர் ஆய்வு செய்திட வேண்டும்

 சாலைகளை சீரமைக்க வேண்டும்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

பின்னர் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் கூறுகையில் "மதுரையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது, சாலை சேதம் காரணமாக மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் சாலைகளை உடனடியாக சீரமைப்பதற்கு, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை துவக்குவதற்கும் வடகிழக்கு பருவ மழை தீவிரத்தை கணக்கில் கொண்டு முன்னதாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தயாராக வேண்டும்.

தீர்வும் காண வேண்டும்

தினசரி கோரிப்பாளையம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஊடகங்களில் நாம் பார்க்கின்றோம். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி இடுப்பு அளவிற்கு நிற்கின்றது அதற்கான மாற்று என்ன என்பதை உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மாநகராட்சிக்கு நிர்வாகம் ஆகியோர்களுக்கு நேரடியான தொடர்பு இருக்கின்றது.

ஏனென்றால் நகரத்திற்குள் தேசிய நெடுஞ்சாலைனுடைய சாலைகள் உள்ளது மாநகராட்சி அதில் பணி செய்து கொண்டிருக்கின்றது எனவே இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அதற்கான தீர்வும் காண வேண்டி உள்ளது. எனவே இது போன்ற பிரச்னைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆய்வுக் கூட்டத்தை வார வாரம் நடத்திட வேண்டும்  

அதேபோல் மதுரை பழங்காநத்தில் இருந்து திருநகர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் திட்டமிட்ட நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. அதையும் முறை படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கும் நாட்களில் இது போன்ற சிரமங்களை போக்கிட வேண்டும். தொடர்ச்சியாக இந்த காலகட்டங்களில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது, குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது.

இதற்கு பிரதான காரணமாக உள்ளது. சாலைகள் இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு அடுத்த 10 நாட்களில் இந்த 34 சாலைகளின் பணிகளை முடிக்க வேண்டும், இதர துறைகள் சார்ந்த சாலைகள் தேசிய நெடுஞ்சாலை சார்ந்த சாலைகள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதும். மேலும் இரண்டு பிரதான சாலைகளில் உள்ள பணிகளை உறுதிப்படுத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம்.

மழைக்காலத்தில் சாலை தொடர்பாக புகார் அளிக்க மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்ககூடிய தனி புகார் எண் வெளியீட வேண்டும் என்று கூறியுள்ளோம். ஒரு வாரத்திற்குள் அதை செய்வதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார், மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் செப்பணிடுவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை வார வாரம் நடத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை நகராட்சித் துறை அமைச்சர் மற்றும் நகராட்சி துறை தலைமைச் செயலர் ஆய்வு செய்திட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். 

தலைப்பு செய்திகள்

பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget