மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?

“திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது எம்பி பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” - ராமசாமி

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என பல்வேறு இடங்களில் பேசி வருவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. "மனு ஸ்மிருதி என்ற நூலில் ஆர்எஸ்எஸ் என்பது இந்துத்துவா என்கிற சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு." என்றும் எழுதியுள்ளார்.
 
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி சட்ட நிலைக்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான டாக்டர் ராமசாமி திருமாவளவன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு பேசுவது தவறு. அவர் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பாஜக சார்பில் புகார் அளித்தோம். அதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
இதனால் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய பிறகு தமிழ்நாடு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்பிறகு இன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்” என்றார்.
 
மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள்தான். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தீவிரவாதியா என கேள்வி எழுப்பி ராமசாமி, திருமாவளவன் இந்திய சட்டத்திட்டத்தின்படி தவறு செய்துள்ளார் என்று கூறினார்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச்சு - திருமாவளவன் கைது செய்யப்படுவாரா..?
 
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சுமோட்டோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற சிறப்பு என்னவென்றால் நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், சாதி கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்றம் 153A, 153B, 295A, 505 IBC படி அவரை கைது செய்யவேண்டும். இதனால் 24 மணி நேரத்தில்  திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்” என்று கூறினார். 

 

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
இப்படி ஒரு செய்தியை நான் சொல்லவே இல்லை.. அத்தனையும் பொய் - இயக்குநர் சுந்தர் சி விளக்கம் !
இப்படி ஒரு செய்தியை நான் சொல்லவே இல்லை.. அத்தனையும் பொய் - இயக்குநர் சுந்தர் சி விளக்கம் !
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கு இன்று தண்டனை? எதிர்பார்ப்பில் நீதிமன்றம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கு இன்று தண்டனை? எதிர்பார்ப்பில் நீதிமன்றம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget