மேலும் அறிய

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்

விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார் என்ற தவறான தகவல் பரவியதால் மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர். என்னிடம் கூட பலர் ஊசி போட வேண்டாம் என்றார்கள் என நகைச்சுவை நடிகர் மதுரை முத்து ABP நாடு செய்தி குழுமத்திற்கு பேட்டியளித்தார்.

மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் மதுரை முத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
 
கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்புகளை உலகமே பெரும் கவலையுடன் பார்க்கிறது. இதன் பேரழிவை கட்டுப்படுத்த சில வழிகள் மட்டுமே உள்ளது அதில், எல்லோருக்கும் மிக விரைவாகத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது. நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அளவுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லாதது, தடுப்பூசிகளும் இல்லாதது என இரட்டை தட்டுப்பாடுகளால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலிலும் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆபத்து என கருதி தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
 

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரபலங்கள் என தடுப்பூசியையே பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அருகில் உள்ள  மாநகராட்சி பள்ளியில் செயல்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுகிறது. கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அவரவர் குடும்ப நலனுக்காகவே அரசு அறிவுறுதலின் படி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்"
 

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
தடுப்பூசி போட்டது குறித்துABP நாடு செய்தி குழுமத்திற்கு மதுரை முத்து அளித்த பிரத்யேக பேட்டியில், " மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் விலகவில்லை. அவங்களுக்கு வந்துருச்சு... நமக்கும் வந்துரும்... என்று பயப்படுகின்றனர். கொரோனா சமயத்தில் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, கவனமாக இருந்தால் போதும். ஒருவருக்கு கொரோனா வந்து இறப்பு ஏற்பட்டால்  நாமும் இறந்துவிடுவோம் என்று நினைக்ககூடாது. முடிந்தவரை கொரோனா வராமல் தவிர்க்க வேண்டும். வந்துவிட்டால்  மருத்துவர் ஆலோசனையோடு தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும். விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார் என்ற தவறான தகவல் பரவியதால் மக்கள் கூடுதல் அச்சமடைந்துள்ளனர். என்னிடம் கூட பலர் ஊசி போட்டுக்க வேண்டாம் என்று தெரித்தனர்.
 

ABP Nadu Exclusive: ‛தயவு செய்து மூடநம்பிக்கைகளை விடுங்க’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுரை முத்து வேண்டுகோள்
 
அது முற்றிலும் விழிப்புணர்வு இல்லாத கருத்து. அவருக்கு வேறு காரணத்தால் இறப்பு ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசியால் இறந்தார் என்று பலரும் அச்சப்பட்டுள்ளனர். அந்த காலத்து மூட நம்பிக்கை போல தற்போதும் இருக்கக் கூடாது. கொரோனாவால் இறந்தவர்களோடு ஒப்பிட்டு கொள்ளக் கூடாது. எனவே இது போன்ற விசயங்களில் மருத்துவர்கள் மீடியா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நான் சொல்வதை கூட கேட்கவேண்டாம் மருத்துவர் சொல்வதை கேட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.
 
 
 

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget