மேலும் அறிய
மதுரை ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! குறை தீர்க்கும் நாளை தவறவிடாதீர்கள், விண்ணப்பிக்க முழுவிவரம் !
மதுரை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வூதிய நபர்கள் - மாதிரிப்படம்
Source : whats app
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களும் அன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சென்னை அரசு முதன்மை செயலர்(நிதித்துறை) அவர்களால் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 19.09.2025-ம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கீழ்கண்ட விபரக் குறிப்புகளுடன் 09.09.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மனுவின் மீது ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனு என்று குறிப்பிட வேண்டும்.
1. விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கண்டிப்பாக இரு நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
2. ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவுமுறை) குறிப்பிடப்பட வேண்டும்.
3. ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விபரம் ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
4. ஓய்வூதியப் பிரேரணை சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விபரம் குறிப்பிடப்பட வேண்டும்.
5. ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து விண்ணப்பிக்கவும், கோரிக்கையின் விபரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
6. ஓய்வூதியதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மதுரை மட்டும்
மேலும், மதுரை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பிற மாவட்டங்களைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறை திக்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
அரசு துறைகளிலிருந்து ஓய்வூதியப் பிரேரணை அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து அரசு முதன்மை செயலர் (நிதித்துறை), சென்னை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மதுரை மாவட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஓய்வூதியர்களின் குறைகளை 19.09.2025-ல் களைய உள்ளார்கள். எனவே, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களும் அன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















