மேலும் அறிய

மதுரை உட்பட தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியச் செய்திகள்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி  பாராட்டி உள்ளார்

1. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்தது. என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
 
2. ராமநாதபுரம் வசந்த நகர் பாலசுப்ரமணிய கோயில் தெரு கிழக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 57. இவர், ராமநாதபுரத்தில் எலக்ட்ரிக்கல் தொழில் செய்து வருகிறார். தொண்டி கனரா வங்கி கிளையில் கணக்கு தொடங்கியுள்ளார். ரூ.4.25 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
3. தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவாரி தீவு, நல்லத்தண்ணி தீவுகளிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.  இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், தீவுகளில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி,  பாராட்டி உள்ளார். இதனால் வனத்துறையினர் மற்றும் கடலோர மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
4. மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடிபோதையில் கணவர் தினமும் தொல்லை செய்வதாக மனைவி அம்மி கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.
 
5. அ.தி.மு.கவில் எந்த பிரச்னையும் இல்லை ஆரோக்கியமாக உள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி.
 
6. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டை தொட்ட  3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.  இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
7. விருதுநகர் அருகில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று தாய் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
8. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
 
 
9. ராமநாதபுரம் கடலில் மாயமான புதுக்கோட்டை மாவட்ட மீனவர் உடல் ராமநாதபுரம் அருகே பிரப்பன் வலசை கடலில் கரை ஒதுங்கியது.
 
 
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75505-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74208-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1183 இருக்கிறது. இந்நிலையில் 114 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் வழங்கும் அரசு வேலை தற்காலிகம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் வழங்கும் அரசு வேலை தற்காலிகம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget