மேலும் அறிய

தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

தனியார் மயமாக்கல் அடிப்படையில் மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைத்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் அம்சராஜ்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைசாலை பணியாளர் சங்கம் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் கூறும்போது,"தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக 25வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில மாநாட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்துவதாக தீர்மானித்துள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் தனியார் மையமாக்கலை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறோம். மக்களின் சேவை துறையாக நெடுஞ்சாலை துறை இருக்க வேண்டும் என்பதற்காக அதனை பாதுகாத்து 25 ஆண்டுகால போராட்டம் இன்றும் நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்போம் என சொல்லி இருக்கிறார்.



தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

இது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் போல் இருக்கும் என கூறியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 18 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில் மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 250 கோடி செலவு செய்ததாக அதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தியை வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைப்பது என்பதும், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் அவருக்கு நெருக்கமான நபரை நியமிப்பதாக செய்தி வெளியாகி கொண்டு இருக்கிறது.


தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்பதன் மூலமாக அது தனியார் பராமரிப்பதற்கு முறைகேடு நடப்பதற்கு வழிவகுக்கும்.அரசின் விதிகள் பெருமளவில் செலவாகும். 3500 நிரந்தர பணியிடம் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படும். இதுபோன்ற தனியார் மயமாக்கல் கொள்கை எதிர்த்த போராட்டத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.


தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

தற்போது திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநாட்டில் தனியார் மயமாக்கல் மூலம் ஏற்படும் பாதிப்புகள், சாலை பணியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம்? வேலை இல்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு எவ்வாறு பறிபோகும் என்பதை கலை வடிவத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் மக்களை சந்திக்க கூடிய நோக்கில் பயணிக்க போகிறோம். ஆகஸ்ட் 19ஆம் தேதி மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கும் எதிர்த்து, நெடுஞ்சாலை சீரமைப்பு என்ற பெயரில் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் முடிவை எதிர்த்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அனைவரும் ஒன்று கூடி அமைச்சரிடம் முறையீடு வைக்கின்ற இயக்கத்தை உருவாக்குவோம் என மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.


தனியார் மயமா? போராட்டம்தான் - எச்சரிக்கும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்

தமிழக அரசு தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் அவ்வாறு நிறைவேற்றாத பட்சத்தில் தொடர்ந்து மக்களை திரட்டி போராட்டம் செய்யக்கூடிய நடவடிக்கைகளில் செல்ல வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு 54 மருத்துவ முகாம்கள் தயார்!
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு 54 மருத்துவ முகாம்கள் தயார்!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: செப். 17 அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: செப். 17 அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்புப் பணிக்கு நியமனம்!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்புப் பணிக்கு நியமனம்!
மதுரையில் சாலமன் பாப்பையாவுக்கு சிறப்பு: அவர் வாழ்ந்த தெருவுக்கு பெயர் சூட்டப்படும்!
மதுரையில் சாலமன் பாப்பையாவுக்கு சிறப்பு: அவர் வாழ்ந்த தெருவுக்கு பெயர் சூட்டப்படும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget