பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி, தால்சா, இரண்டு வாட்டர் பாட்டில்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கான கையெடு, திமுக கட்சி துண்டு ஆகியவை வைக்கப்பட்டிருகிறது.
சுடச் சுட மட்டன் பிரியாணி
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் இன்று (பிப்ரவரி 21) மாலை திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்கும் "என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி" எனும் தென் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக மேலூர் சாலையில், உத்தங்குடியில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்ட அரங்கில் நுழைவதற்கு மூன்று வழிகள் அமைத்து தார் சாலை போடப்பட்டிருகிறது. இதில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் சுடச் சுட மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முகவருக்கும் ஒரு பை கொடுக்கப்பட இருக்கிறது
நூற்றுக்கணக்கான சமையலாளர்கள் உணவு தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக பிரியாணிகள் பொட்டலங்களில் தான் கொடுப்பார்கள். இந்த முறை ஹாட்பாக்ஸ்களில் பிரியாணிகளை அடைத்து கொடுக்க இருக்கின்றனர். இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஒவ்வொரு முகவருக்கும் ஒரு பை கொடுக்கப்பட இருக்கிறது. அதில் பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி, தால்சா, இரண்டு வாட்டர் பாட்டில்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கான கையெடு, திமுக கட்சி துண்டு ஆகியவை வைக்கப்பட்டிருகிறது.
1,98,000 வாக்குச்சாவடி முகவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்
தென் மாவட்டத்தில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1,98,000 வாக்குச்சாவடி முகவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு குடிநீர், இருக்கை, உணவு என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க உள்ள முகவர்கள் வருவதற்காக அடையாள அட்டை கொடுக்கப்பட்டு அவர்கள் வருவதற்கு நான்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு ஸ்கேன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது. 15,000 மகளிர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க உள்ளனர். முகவர்கள் எங்கே அமர வேண்டும், அவர்களுக்கான தண்ணீர் வசதி எங்கே உள்ளது என்கிற மாநாட்டின் வரைபடம் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.