மேலும் அறிய

Madurai corporation election 2022 | மகன்களின் கண்களை கட்டி நூதன பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

’’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க அரசு மக்களை பொய் வாக்குறுதியை கண்களை கட்டியது போல் மக்கள் ஏமாற வேண்டாம்’’

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநாகராட்சி வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேச்சை வேட்பளர்களும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி  ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் துணையோடு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 32-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க பெண் வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் 32- வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., பெண் வேட்பாளர் சுகந்தி அசோக் பல்வேறு விதமாக தினம் தோறும் நூதன பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றார். இந்நிலையில் அவரது மகன்களான ரிஷ்வந்த் , ரித்விக் ஆகிய இரண்டு பேரும் கண்களை கட்டிக் கொண்டு தனது தாயாருக்காக நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ரிஷ்வந்த், ரித்விக் ஆகிய இருவரும் தான் பயின்றுவரும் செவன்த் சென்ஸ்  மூலம் வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்கள் அணிந்து வந்த உடை, அவர்கள் கையில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் செல்போன்களில் உள்ள புகைப்படங்களை அடையாளம் கண்டு வாக்காளர்களிடம் கூறியது வாக்காளர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றது. அவர்கள் வாக்கு சேகரிப்பின் போது , தங்களைப் போன்று கண்களை கட்டிக் கொண்டு 19 ஆம் தேதி வாக்களிக்க வேண்டாம் என்றும் கண்களை நன்றாகத் திறந்து மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் அ.தி.மு.க அரசு மக்களுக்கு செய்த பல நலத்திட்டங்களை எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 


Madurai corporation election 2022 | மகன்களின் கண்களை கட்டி நூதன பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளரின் இரண்டு மகன்களான ரிஷ்வந்த், ரித்விக் இரண்டு பேரும் கண்களில் கட்டிய துணியை எடுக்காமல் தெருக்களில் நடந்து சென்றும் , மாடிப்படிகளில் ஏறி இறங்கி வாக்காளர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து வாக்கு சேகரித்து வாக்காளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.  மதுரை மாநகராட்சி 32 வார்டுக்கு உட்பட்ட பி.டி.ஆர் மெயின் ரோடு, இந்திரா நகர், அண்ணாநகர் சொக்கிகுளம், ராமமூர்த்தி நகர்  உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க அரசு மக்களை பொய் வாக்குறுதியை கண்களை கட்டியது போல் மக்கள் ஏமாற வேண்டாம் என்று தனது மகன்களை வைத்து இப்படி நூதன முறையில் பிரச்சாரம் செய்ததாக அ.தி.மு.க வேட்பாளர் சுகந்தி அசோக் தெரிவித்தார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget