மேலும் அறிய

சிவகாசியில் பட்டாசு விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு ; 25 மணிநேரத்திற்கு பின் உடல்கள் மீட்பு !

மீட்கும் பணி 2-வது நாளாக தொடர்ந்து. 25 மணிநேரத்திற்கு பின் பட்டாசு தொழிலாளர்கள் உடல் மீட்கப்பட்டன

சிவகாசியில் பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்கும் பணி 2 வது நாளாக நேற்று தொடர்ந்து. 25 மணி நேரத்திற்கு பின் நேற்று மாலை 4:35 மணிக்கு உருக்குலைந்த நிலையில் தொழிலாளர்களான  ஹமீதா 55, கார்த்தீஸ்வரி 33, உடல்கள் மீட்கப்பட்டன.
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது நேருஜி நகர் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதி அதிகமாக மக்கள்  நடமாட்டம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் ராமநாதன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவர் சிறிய ரக பட்டாசு குழாய் கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிவகாசியில் பட்டாசு விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு ; 25 மணிநேரத்திற்கு பின் உடல்கள் மீட்பு !
 இந்நிலையில் இவர் குழாய் தயாரிக்கும் உரிமம் பெற்று  இவரது வீட்டில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில்  சட்டவிரோதமாக தயாரித்து  பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.  இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டுருந்த  வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  கார்த்தீஸ்வரி , ஹமீதா ஆகிய 2 பேரை காணவில்லை என்பதால் வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டு இருந்த போதிலும் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். உரிமையாளர் ராமநாதன் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் தலைமறைவாகி விட்டதாகவும் இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசியில் பட்டாசு விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு ; 25 மணிநேரத்திற்கு பின் உடல்கள் மீட்பு !
 சுமார் 25 மணி நேரம் தீயணைப்புத் துறையினர் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசு வெடிப்பதால் தொடர் மீட்புப் பணிக்கு  ஆட்சியர் உத்தரவிட்டார்.  இந்த மீட்புப் பணியில் விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் வெம்பக்கோட்டை சாத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டு வந்தன.  இதன் அருகில் குடியிருப்பவர்கள் மாற்று இடத்திற்கு சென்று தங்க அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்தப் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.  இந்நிலையில் மீட்கும் பணி 2 வது நாளாக நேற்று தொடர்ந்து. 25 மணி நேரத்திற்கு பின் நேற்று மாலை 4:35 மணிக்கு உருக்குலைந்த நிலையில் தொழிலாளர்களான  ஹமீதா 55, கார்த்தீஸ்வரி 33, உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget