மேலும் அறிய

Karthikeyan IAS Allegations | இருக்கையில் அமரும் முன்பே மாற்றப்பட்ட பதவி - முறைகேடு புகார்கள்தான் காரணமா?

740 கோடி ரூபாய் ஊழல் - கார்த்திகேயன் மீது விசாரணை தேவை என 2018-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்ட இரண்டே நாட்களில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன், தீரஜ் குமார் ஆகியோரின் பதவிகளை மாற்றி மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

கடந்த செவ்வாய் கிழமை (மே 25-ஆம் தேதி) தமிழக அரசு 21 ஐஏஎஸ் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றி அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறிய துறைமுகங்களின் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். தீரஜ் குமார் உயர்கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து பணிகள்  மேற்கொள்ள துவங்கும் முன்பே மீண்டும் வியாழன் ( மே 27-ஆம் தேதி ) அன்று பொறுப்புகளை மாற்றி மறு உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

Karthikeyan IAS Allegations | இருக்கையில் அமரும் முன்பே மாற்றப்பட்ட பதவி - முறைகேடு புகார்கள்தான் காரணமா?

கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் உயர்கல்வி துறை செயலாளராகவும், அதே நேரம் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன் மீது முன்வைக்கப்படும் முறைகேடு புகார்கள்தான் இந்த உடனடி மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்குமோ என்ற கருத்து நிலவ தொடங்கியிருக்கிறது.

அப்படி என்ன முறைகேடு புகார்கள் - யார் இந்த கார்த்திகேயன் ? 

தற்போது தமிழக முதல்வராக இருக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார், அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தவர்தான் கார்த்திகேயன். சென்னை மாநகராட்சி ஆணையராக அவர் பணியாற்றிய காலத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை, முறைகேடுகள் நடைபெறுகிறது என்று அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். குறிப்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் "மழை நீர் வடிகால் குழாய் அமைப்பதில், சென்னையில் சாலைகள் அமைப்பதில் டெண்டர் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே டெண்டர் மறைமுகமாக கொடுக்கப்படுகிறது" என குறிப்பிட்டார்.

மேலும் இந்த டெண்டர் ஒதுக்கீட்டு விவகாரத்தில் 740 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளையும் பட்டியலிட்ட ஸ்டாலின், அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி மீதும், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீதும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் திமுக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என்றார். இந்நிலையில் தான் மே 25ம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயனுக்கு நெடுஞ்சாலை துறை போன்ற மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதிற்கு பலர் தங்கள் புருவத்தை உயர்த்தினர்.

மேலும் தன்னார்வ அமைப்புகள் சில (அறப்போர் இயக்கம் ) கார்த்திகேயனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை செயலாளர் பொறுப்பிலிருந்து, உயர்கல்வி துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். உண்மையில் முறைகேடு புகார் இருப்பின், பொறுப்புகளை மாற்றினால் அது சரி ஆகிவிடுமா ? விசாரித்து நடவடிக்கை எடுப்பது அல்லவா சரியான முடிவாக இருக்க முடியும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது

தலைப்பு செய்திகள்

நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
திண்டிவனம் அதிமுக கூட்டத்தில் சலசலப்பு: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெளிநடப்பு!
திண்டிவனம் அதிமுக கூட்டத்தில் சலசலப்பு: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெளிநடப்பு!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget