மேலும் அறிய

Kerala: ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம்...18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன..?

கேரளாவில் உள்ள உணவுக் கடையில் ஷவர்மாவை சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள உணவுக் கடையில் ஷவர்மாவை சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் நடந்ததாகவும், இறந்த மாணவியின் பெயர் தேவானந்தா என கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 18 மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக காசர்கோடு மருத்துவ அலுவலர் தெரிவிக்கையில்,  குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் 11 வயது சிறுமி தேவானந்தாவை பரிசோதித்தும், அவரது உயிரை காப்பாற்றவும் எவ்வளவோ முயற்சி செய்தனர். இருப்பினும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றார். மேலும், சிகிச்சை பெற்றுவரும் 18 மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 



Kerala: ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம்...18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன..?

இதற்கிடையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டு சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, திரிகரிபூர் எம்.எல்.ஏ எம்.ராஜகோபாலன் சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியில் "கடை அடைக்கப்பட்டு சமையல்காரர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். உணவானது விஷமாக மாறியதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். சுகாதாரத்துறையினர் நிலைமையை கண்காணித்து இது குறித்து விசாரிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது," என தெரிவித்தார். மேலும், ஷவர்மாவின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் நேரில் பார்வையிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் தரமான உணவு வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்றார்.

"உணவகங்களில் வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய அரசு மாநிலம் முழுவதும் ஆய்வுகளை நடத்தும்" என்று அமைச்சர் கூறினார்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் சாப்பிட்ட ஷவர்மா கடை மாணவர்கள் படித்த டியூஷன் சென்டருக்கு அருகில் இருந்ததாகவும், இதனால் டியூஷன் முடிந்ததும் மாணவர்கள் அந்த கடையில் சாப்பிட்டபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.