Coolie Surprise: காளி முதல் கூலி வரை... ரஜினி ரசிகர்கள் மதுரையில் செய்த 55 அடி நீள சம்பவம், இனி சர்ப்ரைஸும் இருக்கு !
மதுரையில் ரஜினி பட போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி திருஷ்டி கழித்து, கேக் வெட்டிக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்.

மதுரையில் ரசிகர்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, கேக் வெட்டி கொண்டாட்டம். 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல். கூலி திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட தயாராகி வரும் ரசிகர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் - சூப்பர் ஸ்டார் ரஜினியில் நடித்த ”கூலி” திரைப்படம்
’மூன்று தலைமுறைகளை கடந்து, இன்றளவும் அதிக ரசிகர்களைக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரையுலகில் கருப்பு - வெள்ளை திரைப்படம் தொடங்கி, இன்றைய ஏ.ஐ., தொழில்நுட்பம் வரை மூன்று தலைமுறை கடந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கின்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர். சினிமா அரசியல் திருவிழா என எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் மதுரையை மையமாக வைத்தே சிறப்படைகிறது. இந்த சூழலில் கூலி திரைப்படத்தை கொண்டாட ரஜினி ரசிகர் ஆயத்தமாகி வருகின்றனர்.
காளி முதல் கூலி வரை - கொண்டாடிய ரசிகர்கள்
மதுரை அரசரடியிலிருந்து - பெரியார் நோக்கி செல்லும் பிரதான சாலையோரத்தில் ரஜினி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 55 அடி நீளத்திற்கு அன்று அவர் நடித்த காளி படத்தின் வரக்கூடிய காட்சியை பிரதிபலிக்கும் வண்ணமாகவும், தற்போது வெளியாக உள்ள கூலி படத்தில் அவர் நடித்த காட்சியையும் மையமாக வைத்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸ் பேனரில் ரஜினியின் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கற்பூரமேற்றி தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். மேலும் “கடவுளே ரஜினியே , மனிதக் கடவுள் ரஜினிகாந்தே, சூப்பர் ஸ்டார் ரஜினியே, திரையுலகில் முடி சூடா மன்னன் ரஜினிகாந்த்”- என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வண்ணக் காகிதங்களை பூ மலையாக பொழிய விட்டு, கேக்கு வெட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் - கூலி திரைப்படம் கொண்டாட்டம் இது தான்
மேலும் கூலி திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக, சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரக்கூடிய கதாபாத்திரங்களை போன்று வேடமிட்டும், படம் வெற்றி பெற மண்சோறு சாப்பிட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு கதாபாத்திரத்தோடு, முதல் நாள் முதல் காட்சிக்கு திரையரங்கிற்கு வர உள்ளதாக ரஜினி ரசிகர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ரஜினியின், திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மதுரையில் தற்போதே திரைப்படத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.





















