மேலும் அறிய

Assam Violence: ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல்... போர் களமான அசாம்!

போலீசாரை நோக்கி கட்டையால் அடிக்க வரும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். பின்னர், அனைவரும் சேர்ந்து அடிக்கின்றனர். இதில் அவர் மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் படுத்துக் கிடக்கிறார்.

அசாம் மாநிலம் தர்ரங் மாவட்டம் தோல்பூர் பகுதியில்  அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், போலீசாரை நோக்கி கட்டையால் அடிக்க வரும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். பின்னர், அனைவரும் சேர்ந்து அடிக்கின்றனர். இதில் அவர் மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் படுத்துகிடக்கிறார். அவர் மீது கேமராவுடன் இருக்கும் நபர் ஒருவர் இரண்டு முறை எகிறிகுதித்து செல்கிறார். இந்த தாக்குதலால் அவர் இறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

தோல்பூரில் நடந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஒன்பது போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாக போலீசார் கூறுகின்றனர். தர்ராங் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மாகூறுகையில்,  “உள்ளூர்வாசிகள் வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்தனர். கற்களை வீசத் தொடங்கினர். இந்த கலவரத்தால் ஒன்பது போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இரண்டு பொதுமக்களும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது” என்று கூறினார்.

உள்ளூர்வாசி சுடப்பட்டு பின்னர் அடித்த காட்சிகளைப் பற்றி கேட்டபோது, "அந்த பகுதி பெரியது. நான் இன்னொரு பக்கத்தில் இருந்தேன். நான் நிலைமையை கண்டுபிடித்து அதுகுறித்து விசாரணை செய்வேன்” என்று கூறினார்.

 

800 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதால் திங்கள்கிழமை முதல் இப்பகுதியில் பதற்றம் நிலவியது. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்களன்று வெளியேற்றப்பட்ட பிறகு ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "800 வீடுகளை வெளியேற்றுவதன் மூலம் சுமார் 4500 பிகாவை அழித்ததற்காக தர்ராங் மற்றும் அசாம் காவல்துறையின் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:

வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி

அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!

மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?

மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget