மேலும் அறிய

கொரோனா அதிகரிப்பு: கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் ; கேரள எல்லையில் தீவிர சோதனை!

கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

கேவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினமும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி பால், மருந்தகம், காய்கறி ஆகிய அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி, கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, காந்திபுரம், ஒப்பணகார வீதி, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அதிகரிப்பு: கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் ; கேரள எல்லையில் தீவிர சோதனை!

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் இருப்பதால், தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையான  வாளையார் பகுதியில் கேரளாவில் இருந்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் கோவைக்கு வருபவர்கள் இ பதிவு செய்துள்ளனரா என்ன சோதிக்கப்பட்ட பிறகே காவல் துறையினர் தமிழக எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். கோவையில் கடந்த ஒரு வாரமாக நோய்தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கொரோனா இன்மை சான்று அதாவது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சான்றை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம்  அறிவித்தது. ஆனால் வாளையார் சோதனைசாவடியில் வழக்கம் போல இ பதிவு செய்துள்ளனரா என சோதித்து தமிழக எல்லைக்குள் அனுப்பி வருகின்றனர்.


கொரோனா அதிகரிப்பு: கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் ; கேரள எல்லையில் தீவிர சோதனை!

காவல் துறையினரின் சோதனைக்கு அஞ்சி ஒரு வழிப்பாதையில் தப்பி தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களை தடுக்க,  காவல் துறையினர் புதிதாக தடுப்புகளை அமைத்துள்ளனர். கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு வாளையாறு சோதனைச் சாவடியில்  5-ஆம் தேதி முதல் இ பதிவுடன் கொரோனா நெகடிவ் சான்று, அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்படுமென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கொரோனா அதிகரிப்பு: கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் ; கேரள எல்லையில் தீவிர சோதனை!

இதேபோல தமிழ்நாடு முழுவதும் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் வருகின்ற 5 ம் தேதி முதல் கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சான்றை காட்டினால் தான், அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பியமணியன் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget