மேலும் அறிய

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

4 மணிநேர காத்திருப்பிற்கு பிறகு ஆம்புலன்ஸ் கிடைத்து. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை உள்ள மருத்துவமனையை தேடி அலைந்து சேர்த்தோம். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் நண்பரை காப்பாற்ற முடியவில்லை.

கோவையில் உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழந்த நண்பரின் நினைவாக, அவரது நண்பர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர். கோவையில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பில் சென்னையை கோவை முந்தியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதேபோல படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காதது உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது.

கோவையை அடுத்த  அசோகபுரம் பகுதியில் ஆக்சிஜன் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி உரிய நேரத்தில் கிடைக்காததால், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது நண்பர்கள் இணைந்து ஆக்சிஜன் வதியுடன் கூடிய இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை துடியலூர், அசோகபுரம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

இதுகுறித்து நண்பர்கள் அறக்கட்டளையினர் கூறுகையில், “கடந்த வாரம் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. 4 மணிநேர காத்திருப்பிற்கு பிறகு ஆம்புலன்ஸ் கிடைத்து. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை உள்ள மருத்துவமனையை தேடி அலைந்து சேர்த்தோம். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் நண்பரை காப்பாற்ற முடியவில்லை. நண்பருக்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்ற முனைப்பில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென முடிவு எடுத்தோம். ஒரு வார கால முயற்சியில் அசோகபுரம் மக்களின் நிதியுதவியோடு இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளோம். 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை வழங்க உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

கொரோனா உதவி மையமாக மாறிய கட்சி அலுவலம்

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகம் கொரோனா பேரிடர் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் தபெதிக அமைப்புகள் இணைந்து இம்மையத்தை அமைத்துள்ளனர். இம்மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

இம்மையத்தை 7449110884, 9952579108, 9940766109, 9894323590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும்,  ஆம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் கான்செண்டிரேடர், மன நல ஆலோசணைகள், மருத்துவமனைகள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
Embed widget