மேலும் அறிய

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

4 மணிநேர காத்திருப்பிற்கு பிறகு ஆம்புலன்ஸ் கிடைத்து. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை உள்ள மருத்துவமனையை தேடி அலைந்து சேர்த்தோம். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் நண்பரை காப்பாற்ற முடியவில்லை.

கோவையில் உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழந்த நண்பரின் நினைவாக, அவரது நண்பர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர். கோவையில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பில் சென்னையை கோவை முந்தியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதேபோல படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காதது உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது.

கோவையை அடுத்த  அசோகபுரம் பகுதியில் ஆக்சிஜன் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி உரிய நேரத்தில் கிடைக்காததால், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது நண்பர்கள் இணைந்து ஆக்சிஜன் வதியுடன் கூடிய இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை துடியலூர், அசோகபுரம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

இதுகுறித்து நண்பர்கள் அறக்கட்டளையினர் கூறுகையில், “கடந்த வாரம் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. 4 மணிநேர காத்திருப்பிற்கு பிறகு ஆம்புலன்ஸ் கிடைத்து. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை உள்ள மருத்துவமனையை தேடி அலைந்து சேர்த்தோம். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் நண்பரை காப்பாற்ற முடியவில்லை. நண்பருக்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்ற முனைப்பில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென முடிவு எடுத்தோம். ஒரு வார கால முயற்சியில் அசோகபுரம் மக்களின் நிதியுதவியோடு இரண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளோம். 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை வழங்க உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

கொரோனா உதவி மையமாக மாறிய கட்சி அலுவலம்

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகம் கொரோனா பேரிடர் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் தபெதிக அமைப்புகள் இணைந்து இம்மையத்தை அமைத்துள்ளனர். இம்மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.

உயிர் நண்பனின் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய நண்பர்கள்

இம்மையத்தை 7449110884, 9952579108, 9940766109, 9894323590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும்,  ஆம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் கான்செண்டிரேடர், மன நல ஆலோசணைகள், மருத்துவமனைகள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (25-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget